Skip to main content

"அதை அசைச்சு பார்க்காதீங்க, ஆடிப்போய்டுவிங்க"- இயக்குனர் கவுரவ் நாராயணன் எச்சரிக்கை!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

gaurav narayanan

 

சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள். 

 

அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான கவுரவ் நாராயணன் வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

 

அதில், "மாதா, பிதா, குரு, தெய்வம்... ஏன் இதில் தெய்வத்தை நான்காவதாக வைத்திருக்கிறார்கள் தெரியுமா? ஒரு நல்ல தாயின் மூலமாகத்தான் தந்தை யாரென தெரியும், ஒரு நல்ல தந்தையின் மூலமாகத்தான் குரு யாரென தெரியும், ஒரு நல்ல குருவின் மூலமாகத்தான் தெய்வம் யாரென தெரியும். அதனால் இந்த மூன்றும் சரியாக அமையாதவர்களுக்குத்தான் கடவுள் கண்ணனுக்குத் தெரியமாட்டார். 

 

'கறுப்பர் கூட்ட'த்திற்கு கடவுள் இல்லை என்பது அவர்களது நம்பிக்கை, அப்படியே இருந்துவிட்டுப் போகிறது. எங்களுடைய நம்பிக்கையில் கடவுள் இருக்கிறார்கள். அதை அசிங்கப்படுத்துவதில் என்ன சந்தோசம் உங்களுக்குக் கிடைத்துவிடப் போகிறது. கடவுள் இல்லை என்று சொல்வதற்கு ஆயிரத்திற்கும் மேல் கருத்துகளை முன் வைப்பீர்கள். ஆனால், எங்களுக்குக் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு ஒரே கருத்து எங்களின் நம்பிக்கைதான். 

 

அதை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் ஆடிப்போய் விடுவீர்கள். உங்களைப் போல எத்தனையோ பேர் கடவுள் இல்லை எனச் சொல்லிவிட்டு கோவில்களில் அரோகராகவும், கோவிந்த கோஷமும் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதனால் மதத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ  தயவு செய்து கலவரத்தை உண்டு பண்ணாதீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட் vs மோலிவுட்; எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சரமாரி கேள்வி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Kerala's famous writer unni asked writer Jeyamohan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது குணா குகை. இந்தக் குகையைக் கண்டறிந்த ஆங்கிலேயேர்கள் இதற்கு டெவில் கிச்சன் என பெயர் சூட்டினர். மிகவும் ஆபத்தான இந்தக் குகையில், கடந்த 33 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த குணா என்ற திரைப்படம் உருவானது. அதன் பிறகே, டெவில் கிச்சனாக இருந்த இந்தக் குகை, குணா குகை எனப் பெயர் பெற்றது.

இந்தக் குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் `மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்தத் திரைப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் எனப் பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அவர், அதனை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி. ஆனால் 'யானை டாக்டர்' எழுதியவன் என்கின்ற முறையில் இதை எழுத வேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துகள் வழியாக நேற்று 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என அந்தக் கட்டுரையை ஆரம்பித்த எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இவர்கள் சுற்றுலா மையங்களுக்கு மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி..குடி..குடி.. அவ்வளவுதான். எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். என அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கேரளா மட்டுமல்லாது தமிழ் சினிமா துறையில் இருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் பலர் சமூக வலைத்தளங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவின் பிரபல எழுத்தாளரான உண்ணி, ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மலையாள மனோரமாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் அவ்வளவு விஷமத்தனம் உள்ளது. குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற வாதம் மேட்டுமைத்தனத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்க, இதனை ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே சிலர் பார்க்கிறார்கள். இந்த ஆதிக்க உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின் இருக்கும் உண்மை.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடித்தட்டு வாழ்க்கை வாழும் நண்பர்களின் கதை. படத்தில் அவர்கள் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்டினாலும், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றிய மனிதாபிமானம் இந்த ஆசாமி கண்ணில் ஏன் படவில்லை. இயற்கையின் சீற்றத்தால், பிரச்சனை ஏற்பட்ட போது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும் இருந்தார்கள் எனவும் சாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அந்தக் கட்டுரையின் இறுதியில் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில், கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதா?... உங்களுக்குள் இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு?... உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?... கேரளத்துக்கு கதை எழுத வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதலா இந்த வசை மாரி?... உள்ளிட்ட காட்டமான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் இப்படி விமர்சனம் செய்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஆஸ்கர் விழாவில் கவனம் ஈர்த்த பழங்குடியின தம்பதியின் வாழ்க்கை

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

first tamil movie gets to oscars award

 

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது விழா இந்தாண்டும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. ஆஸ்கர் விருது பெறுவது என்பது ஒவ்வொரு கலைஞனின் கனவு எனக் கூறலாம். இந்தக் கனவு பலருக்கும் கனவாகவே தற்போது வரை இருந்து வருகிறது. ஆனால் அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறது 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. ஆவணக் குறும்படமாக எடுக்கப்பட்ட இப்படம் தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி என்ற இரு பழங்குடிகளைப் பற்றிய கதை. 

 

இந்த நிலையில் இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் வசித்து வரும் இயக்குநர் கார்த்திகி ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்டவர். இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்காக அந்த பழங்குடியின மக்களுடன் ஐந்து ஆண்டுகள் பயணித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆஸ்கருக்கு முன்னதாக ஐடிஏ ஆவணப்பட விருதுகள் (IDA Documentary Awards), ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது (Hollywood Music in Media Awards) உள்ளிட்ட சர்வதேச விருதுகளில் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தது. 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் விருது பெற்றிருந்தாலும் பெரிய படத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹேராம், விசாரணை மற்றும் கடைசியாக அனுப்பப்பட்ட கூழாங்கல் என பல்வேறு படங்களை அனுப்பியிருந்தாலும் எதுவுமே நாமினேஷன் பட்டியலில் கூட இடம் பெற்றதில்லை. இதற்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பெற்றிருந்தாலும் தமிழ் அல்லது இந்திய படைப்புகளுக்காக பெற்றதில்லை. 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.