director bharathiraja recovered from Corona

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

Advertisment

அந்தவகையில்இயக்குநர்பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர்பாரதிராஜா கரோனாதொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நலம் விசாரித்த அனைத்துஉறவுகளுக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisment