Skip to main content

"விஜய் பட பாட்டைப் பாடி பிச்சை எடுக்க முடியாது" - 'கில்லி' கதை சொல்கிறார் பரதன்

Published on 22/06/2019 | Edited on 23/06/2019

விஜய்யின் திரைவரலாற்றில் மிக முக்கியமான வெற்றி 'கில்லி'. அதுவும் அது சொல்லியடித்த 'கில்லி'. இந்தப் படம் பெரிய ஹிட்டாகுமென்று நம்பிக்கையோடு விஜய், தரணி, ஏ.எம்.ரத்னம் மூவரும் முன்பே பேட்டிகளில் கூறியிருந்தனர். இது பொதுவாக எல்லோரும் சொல்வதுதான் என்றாலும் அவர்கள் சொன்னது பெரும் நம்பிக்கையுடன். அதன்படியே படம் மிகப்பெரிய வெற்றி. படத்தின் வசனங்கள் அந்த நேர விஜய் - அஜித் ரைவல்ரிக்கு எண்ணெய் ஊற்றியவை. விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அந்த வசனங்களை எழுதியவர் பரதன். பின்னாளில் அழகிய தமிழ்மகன், பைரவா என இரண்டு படங்களில் விஜயை இயக்கியுள்ளார். அஜித்தின் 'வீரம்' படத்திற்கு இவர் எழுதிய வசனங்கள் பேசப்பட்டன. நக்கீரனுக்காக அவர் எக்ஸ்க்ளூசிவ்வாகப் பகிர்ந்த 'கில்லி' கதை...

 

director baradhan



"நானும் தரணி சாரும் சேர்ந்து தில், தூள் ரெண்டும் பெரிய ஹிட். ஒரு ஹாட்ரிக் அடிக்கணும்னா மூன்றாவது படம் மத்த இரண்டு படங்களை விட நல்லா வரணும். அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசனை பன்னிக்கிட்டு இருக்கறப்ப, ஏ.எம்.ரத்னம் சார் 'இதே டீம், ஹீரோ விஜய் சாரு'ன்னு சொல்லிட்டாரு. விஜய் சாருக்கான கதை தேவை. அதற்காக யோசனைகளில் இருக்கும் போது தெலுங்கில் 'ஒக்கடு'னு ஒரு படம் மகேஷ் பாபு நடிச்சி வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை போய் பாருங்கன்னு தரணி சார் என்கிட்ட சொன்னாங்க. விஜய் சாரும் அந்தப் படத்தை பாத்திருந்தாங்க. நான் சென்னையில உள்ள தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன். இருந்தாலும் மக்களோடு உட்கார்ந்து அந்தப் படத்தை பார்த்து அவங்களோட ரெஸ்பான்ஸ் என்னனு பாக்கணும்னு எனக்கு ஆசை.

உடனடியாக அன்னைக்கு ஈவினிங்கே நானும், தரணி சாரும் சேர்ந்து ஹைதராபாத்க்கு போனோம். முழு படத்தையும் பார்த்தோம். எந்த இடத்துல அப்லாஸ் வருது, எந்த இடத்துல ரசிகர்கள் என்ஜாய் பண்றாங்க என்பதையெல்லாம் கவனிச்சோம். அப்பவே சில குறிப்புகளை எடுத்துக்கிட்டோம். இருந்தாலும், படத்தோட இயக்குநரிடம் பேசி, படம் எந்த சூழ்நிலையில் உருவானது, நினைச்ச மாதிரியே படம் எடுக்க முடிந்ததானு பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டோம். அவரும் எங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களை கூறினார். அப்புறம் அடுத்த நாள் கலையிலேயே பிளைட் பிடிச்சி சென்னை வந்தோம். அதற்குள் படத்துக்குத்  தேவையான அனைத்து முக்கிய விஷயங்களையும் தயாரித்திருந்தோம்.


குறிப்பா அந்தத் தெலுங்கு படத்தில் பெரிய கூட்டத்துல ஹீரோ வில்லனை அடிச்சிட்டு, சிட்டியில இருக்கிற ஒரு பில்டிங்கில் கொண்டுவந்து ஹீரோயின யாருக்கும் தெரியாம மறைத்து வைத்திருப்பார். அப்ப நம்ம எப்படி செய்யலாம்னு யோசிச்சதுல, ஹீரோ மதுரையில ஊரையே ஆட்டிப்படைக்கிற வில்லனை அடிக்கற மாதிரியும், ஹீரோயினை மதுரையில இருந்து கொண்டு வந்து சென்னையில லைட் ஹவுஸ்ல வைக்கிற மாதிரியும் சீன் வைக்கலாம்னு முடிவு செய்தோம். கூடவே மயில்சாமி மாதிரி ஹீரோவோட ஃபேனா இருக்கிறவர அந்த இடத்துல பாதுகாப்புக்கு போடனுங்கிறதையும் நோட் பன்னி வைத்திருந்தோம். முக்கியமா படம் பார்க்கும்போதே படத்தோட இன்டர்வெல் பிளாக்க மாத்தணும்னு முடிவு செய்தோம். ஏன்னா, அந்த படத்துல பிரகாஷ்ராஜ் அடிவாங்கிட்டு சேத்துல இருக்குற மாதிரி இன்டர்வெல் பிளாக் விடப்படும். ஆனால் விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் போது, வில்லனை ஃபோகஸ் பண்ணி இன்டர்வெல் விட்டா அது நல்லா இருக்குமா சரியா இருக்காதேன்னு நினைத்தோம். விஜய் சார் ஏதாவது பண்ணிட்டு மாஸா இன்டர்வெல் விட்டா நல்லா இருக்குமே மட்டும் மனசுல பிக்ஸ் பண்ணிக்கிட்டோம். காட்சி எப்படி இருக்கணும்னு படம் பண்ணும்போது பாத்துக்கலாம்னு முடிவு செய்திருந்தோம். இது எல்லாத்தையுமே சென்னை வருவதற்குள்ள நானும் தரணி சாரும் முடிவு செய்தோம்.

 

 

gilli vijay thrisha



வசனங்களிலும் நல்லா கவனம் செலுத்தினோம். 'தம்மாதுண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கைய உன் மேல வை' என்ற வசனத்தை விஜய் சார் பேசியிருப்பாரு. படத்துல சென்னை பையனா இருக்குறதால அந்த மாதிரி லோக்கலா பேச வேண்டிய நிலை இருந்தது. ஒக்கடுவிலும் இந்த வசனம் இருந்தது. அந்த காலகட்டத்துல விஜய் சார்க்கு இருந்த ரசிகர்கள், மாஸ் இதையெல்லாம் மனசுல வச்சு வசனங்களை உருவாக்கினோம்.


என்னோடைய பார்வையில் புரட்சி தலைவர் எம்..ஜிஆரோட  பாடலை பாடி ரயிலிலோ அல்லது தெருவிலோ யாரும் பிச்சை எடுக்க முடியாது. எல்லாமே ஒரு உத்வேகத்தை, கொள்கையை கொண்டதாகவே இருக்கும். 'நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே'னு சொல்லிட்டு யாரும் தெருவுல பிச்சை கேட்க முடியுமா? முடியாதில்ல? அதை போலதான் விஜய் சாருக்கும் பெரிய ஃபேன்ஸ், ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அவரு சொல்ற விஷயங்கள் எல்லாம் பாடல், வசனம் என பெரிய அளவுல ரீச் ஆகணும்னு முடிவு செய்து வேலையை பார்த்தோம். 
 

 

gilli vijay



சில நடிகர்களுக்கு குறிப்பிட்ட சென்டர்களில் மட்டும்தான் ரசிகர்கள் இருப்பார்கள். விஜய் சாரை பொறுத்த வரையில், அவருடைய கிராஃப் எல்லா சென்டர்களிலும் சமமாகத்தான் இருக்கும். அதை மனதில் வைத்துதான் ஒவ்வொன்றையும் செதுக்கினோம். 'அப்புல இருக்கிறவன் டவுன்ல வரதும், டவுன்ல இருகிறவன் அப்புல வரதும் ஒன்னும் பெரிசு இல்லை. எதிரியை எப்படி ஆப்பு வைச்சிட்டு ஜெயிக்கிறதுதான் மேட்டரு' என்ற வசனமும் அப்படி அமைந்ததுதான். இந்த வசனத்தை முதலிலேயே படத்துல வைக்கணும்னுதான் என் மனசில பிக்ஸ் பண்ணியிருந்தேன். அதை அப்படியே இயக்குநர் தரணி சார்கிட்ட சொன்னேன். அவர் சூப்பர், வைச்சிடலாமுன்னு சொன்னாரு. அவர்தான் என்னோட முதல் ரசிகன். அவருக்கு பிடிச்சதுனா அது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக எப்போதும் இருக்கும்.

கில்லி படம் குறித்து நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு. அதையும் தாண்டி நம்ம எழுதுற வசனங்களை அவர் எப்படி பேசுறாருனு பாக்குறதே பெரிய சந்தோஷமா இருக்கும். ஒரு வில்லனிடம் சொடக்கு போடற காட்சியாகட்டும் அல்லது நகைச்சுவையான வசனங்களாகட்டும் எல்லாவற்றையும் 100 சதவீதம் சிறப்பாக செய்து பிரமாதப்படுத்திவிடுவார்.  இப்ப கூட பாருங்க கில்லி படத்துல எல்லாமே கரெக்ட்டா இருக்கும். எந்த காட்சியும் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ தேவையில்லாமல் நீட்டா அமைந்திருக்கும்."

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாரு முயல்? யாரு யானை?''- வழக்கம்போல் குட்டிக்கதை சொன்ன விஜய்

Published on 01/11/2023 | Edited on 02/11/2023

 

"Who is the rabbit? Who is the elephant?''-Vijay told a short story as usual

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் ஒரு குட்டி கதை சொன்னார். அவர் பேசியதாவது ''இரண்டு பேர் ஈட்டியுடன் வேட்டைக்கு சென்றார்கள். ஒருத்தர் ஈட்டியில முயல அடிச்சு தூக்கிட்டாரு. இன்னொருத்தர் ஈட்டியை வைத்து யானையை எய்ம் பண்றாரு, எய்ம் பண்றாரு மிஸ் ஆயிட்டே போகுது. அப்ப ரெண்டு பேரும் மீண்டும் ஊருக்குள்ள வராங்க. ஒருத்தர் கையில முயலோட வரார். ஒருத்தர் வெறும் கையில் வேலோட வரார். இவங்க ரெண்டு பேத்துல யாரு ஜெயிச்சாங்க'னு நினைக்கிறீங்க. யார் கெத்து'னு நினைக்கிறீங்க.

 

அந்த யானையை எய்ம் பண்ணி தவற விட்டார் இல்ல அவர் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா நம்மால் எதை ஈசியா ஜெயிக்க முடியுமோ அதை ஜெயிப்பது வெற்றியில்ல நண்பா. நம்மால் எது ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க முயற்சி பண்றோம் இல்ல, அதுதான். உன்னிப்பாக கவனிக்கணும், முயற்சி பண்றோம் இல்ல, அதுதான் உண்மையான வெற்றி. உங்களுடைய குறிக்கோள்; உங்களுடைய லட்சியம்; எல்லாம் பெருசா யோசிங்க, பெருசா கனவு காணுங்க, பெருசா திங்க் பண்ணுங்க, யாரும் அதெல்லாம் யாரும் தவறு'னு சொல்ல முடியாது.

 

பாரதியார் சொன்னது தான் 'பெரிதிலும் பெரிது கேள்' அப்படி இருக்க வேண்டும் உங்கள் கனவுகள்; அப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசைகள்; அப்படி இருக்க வேண்டும், உங்கள் உழைப்பு. அப்படி நீங்கள் பயணித்தால் இலக்கை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு நண்பா. ஆசைகள் இருக்கும்; கனவுகள் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது. வீட்ல ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பாவோட சட்டையை எடுத்து போட்டுக்குவான். அவரோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளனு இருக்கும். வாட்ச் கையிலே நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா இல்லையா? அந்த தகுதி எல்லாம் தெரியவே தெரியாது.  அப்பா மாதிரி ஆக வேண்டும் என்று கனவு. இதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணு நண்பா.

 

தயவு செஞ்சு சொல்றேன் சினிமாவை சினிமாவா பாருங்க. உலகம் முழுவதும் பார்த்தால், சினிமா மக்கள் பார்க்கின்ற பொழுதுபோக்கு அம்சம். அதில் வருகின்ற டயலாக், சீன்ஸ் எல்லாமே முழுக்க முழுக்க ஒரு கற்பனை. முழுக்க முழுக்க ஒரு செயற்கை தனமானது என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். அப்படி ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காட்டுவதற்கு நீங்கள் என்ன பண்ணுவீங்க. அதற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள், அதற்கு தகுந்த மாதிரி சில வசனங்களை வைப்பது ஸ்கிரீன் பிளேயில் ஒரு காமனான விஷயம். அப்படி ஒரு சில கேரக்டர்கள் மூலம் சொல்லப்படுகின்ற சில தவறான எண்ணங்கள், ஆக்சன்... நான் உங்களுக்கு சொல்லி புரிய வைத்து அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு டெஃபனட்டா தெரியும் நீங்கள் யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டீங்க என்று. நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு  அன்மெச்சூரா என்ன. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. மற்றதை விட்டுருங்க. திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்''  என்றார்.

 

 

 

Next Story

‘தளபதி 68’ - அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு பதில்!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Venkat Prabhu about Thalapathy 68

 

காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்த சுனைனா முதன்மை கதாபாத்திரமாக நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ரெஜினா’. இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

 

இதில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில் “இந்த ரெஜினா படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான சதீஷ் குமார் எனக்கு ஆரம்ப கால நண்பன். எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நபர் அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்தப் படத்தில் நடித்த சுனைனா இதற்கு முன் இப்படி ஒரு பரிமாணத்தில் பார்த்ததே இல்லை . அந்த அளவுக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்

 

மேலும், விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது  "இப்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டை கூறினால், விஜய்யே என்னை திட்டுவார். அதனால் லியோ படம் வெளிவரட்டும் அதன்பின்பு தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ்  கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.