Skip to main content

அர்ஜுன் பட  இயக்குநருக்கு ஒமிக்ரான் தொற்று! 

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

director arun vaidyanathan tests positive Omicron

 

பிரபல இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், மலையாளத்தில் மோகன்லால் நடித்த பெருச்சாழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக அர்ஜுன் நடிப்பில் வெளியான 'நிபுணன்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து இயக்குநர் அருண் வைத்தியநாதன் தற்போது ஷாட் பூட் 3 என்று குழந்தைகள் படத்தை இயக்கி வருகிறார்.

 

ad

 

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான சளி இருமல் இருந்த நிலையில் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், "எனது வீட்டிற்கு புதிய விருந்தாளி வந்திருக்கிறார். அவர் பெயர் ஒமிக்ரான். கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே. சமீபத்தில் வாரணாசி கும்பமேளா பகுதியில் 28 நாட்கள் 169 நபர்களுடன் படப்பிடிப்பை நிறைவு செய்து அமெரிக்க திரும்பிய எனக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது குடும்பத்தில் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” - அர்ஜுன் 

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
arjun about modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார் நடிகர் அர்ஜுன். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கோவிலுக்கு அவரை அழைத்திருக்கிறேன். விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். நான் பிஜேபியில் இணையவில்லை. முதலில் அரசியல் நமக்கு தெரியாது. முதல் தடவை அவரை சந்திக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு ஆளுமை. எனது குடும்பத்திலும் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்றார். சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘விடாமுயற்சி’ - ஏ.கே. க்ளிக்ஸ்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023

 

 

 

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.

அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரவ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது உறுதியாகிவிட்டது. அஜித்துடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று யூகியுங்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவிற்கு கீழ் அனைவரும் அஜித் என கமெண்ட் செய்திருந்தனர். 

இந்த நிலையில் படக்குழுவை அஜித் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அர்ஜுன் நேற்று பகிர்ந்திருந்த புகைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனியின் புகைப்படம், ரெஜினா கெஸாண்ட்ராவின் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட் செய்யப்பட்டார். முதற்கட்ட படப்பிடிப்பும் அவர்தான் பணியாற்றினார். ஆனால் அண்மையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.