Skip to main content

கொடூரக் கொலை; குடும்ப ரசிகர்களுக்கும் பயம் - இறைவன் குறித்து இயக்குநர்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

director ahmed about iraivan movie

 

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இறைவன்'. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் ட்ரைலர் நாளை (03.09.2023) வெளியாகிறது. 

 

இந்நிலையில் இப்படம் குறித்து அகமத் பேசுகையில், "இந்தப் படத்தை நாங்கள் ஒரு மர்டர் மிஸ்டரி திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். பொதுவாக மர்டர் மிஸ்டரி படங்கள் எப்படி இருக்குமோ அப்படி இந்த படம் இல்லாமல் வேறு ஒரு டெம்ப்ளேட்டில் இப்படம் இருக்கும். அது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும். ஜெயம் ரவிக்கு கதை பண்ணும் பொழுது அவர் நிறைய போலீஸ் கதைகள் செய்துவிட்டார். அப்படி இருக்கும் சமயத்தில் இந்த படத்தின் கதையை அவரிடம் கூறும் பொழுது மற்ற போலீஸ் கதைகளில் இருந்து இதில் எந்த அளவு வித்தியாசப்படுத்தி கதை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி படம் செய்து அவரை சம்மதிக்க வைத்தோம். 

 

நயன்தாரா, அவரது திருமணத்திற்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் செய்து இருக்கிறேன் எனக் கேட்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் வெறும் எட்டு ஒன்பது மாதத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. நடுவில் கொரோனா காலகட்டம் என்பதால் அதன் காரணமாக படத்தை அந்த சமயத்தில் எடுக்க முடியவில்லை. அதன் பிறகு படத்தை ஆரம்பித்த நாங்கள் வெறும் 8, 9 மாதங்களிலேயே இப்படத்தை முழுவதுமாக முடித்து விட்டோம். 

 

இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு சீக்கிரமாக முடிப்பது என்பது மிகப்பெரிய காரியம். அதை நாங்கள் திறம்படச் செய்திருக்கிறோம். மற்ற சைக்கோ படங்களில் இருப்பது போல் இந்தப் படத்தில் கொடூரக் கொலைகள் இருக்கின்றன. அதை பார்க்கும் பொழுது ஒருவித இனம் புரியாத பயம் நம்முள் ஏற்படும். அந்த மாதிரியான பயத்தையே இப்போதுள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் ரசனைக்கேற்ப இப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அவர்கள் மட்டுமல்லாது குடும்ப ரசிகர்களுக்கும் இந்த படம் ஒரு பயம் கலந்த அனுபவத்தை கொடுத்து ரசிக்கும்படியாக அமையும் என்று நம்புகிறோம். இந்த படம் செப்டம்பர் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. நன்றி" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர் மரணம் - வீட்டுக்குச் சென்று ஜெயம் ரவி ஆறுதல்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
jayam ravi condolence to his fan passed away

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.  

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.