Skip to main content

மீண்டும் சினிமாவில் நடிக்கும் திண்டுக்கல் லியோனி! 

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும்  தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கும் படம் 'ஆலம்பனா'. முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தில் நாயகனாக வைபவ், நாயகி பார்வதிநாயர் நடிக்கின்றனர். மேலும் முனிஷ்காந்த், காளிவெங்கட், ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், முரளிசர்மா, கபீர்துபான் சிங் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்ற புகழ் திண்டுக்கல் ஐ லியோனி சிறப்பான வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக கங்கா கௌரி படத்தில் நடித்திருந்தார்.

 

dindugal leoni

 

 

பேண்டஸி வகை படமாக உருவாகும் இப்படத்தை முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய பாரி.கே.விஜய் இயக்கவுள்ளார். ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய்  உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர்.  மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” - லியோனி வருத்தம்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

திரைப்பட நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இன்று (28.12.23) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடம் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; “விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர், திரைப்பட நடிகர் என்பதையெல்லாம் மீறி நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவரின் மனிதத் தன்மையின் காரணமாகவே, இன்று அரசியல் கட்சியையெல்லாம் தாண்டி அனைவரும் அவரின் மரணத்திற்கு வேதனையுடன் இருக்கிறோம். தன் வீட்டிற்கு தேடி வருபவர்கள் தன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், அவர்கள் சாப்பிட்டார்களா, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கவனிப்பவர். அவ்வளவு இரக்க குணம் கொண்டவர்.  

vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

2011ம் ஆண்டு தேர்தலின் போது நான் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி எனும் ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்த இடத்திற்கு அருகேயே, அவரும் பிரச்சாரத்திற்கு தயாராக வந்துவிட்டார். என் பிரச்சாரத்தின் அருகே தே.மு.தி.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அப்பொழுது விஜயகாந்த், ‘லியோனி பேசி முடிக்கும் வரை யாரும், எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. அவர் பேசி முடிக்கும் வரை நான் காத்திருக்கிறேன்’ என்று அவரின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பிறகு நான் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை காத்திருந்து பிறகு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த நிகழ்வின் போது இருவரும் எங்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். அப்பொழுது, அவர் எனக்கு கை குலுக்கிவிட்டு, ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துவிட்டு சென்றார். இப்படியான ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் விஜயகாந்த். எனவே, அவரின் இழப்பு என்பது அரசியலுக்கும், திரைத்துறைக்கும் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று தெரிவித்தார்.

Next Story

'முதல்வரை இப்படிப் பேசலாமா' - லியோனிக்கு தமிழிசை கண்டனம்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

'Can we talk like this for the chife minister' - Tamilization condemned for Leoni

 

'எங்களால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை; மன உளைச்சலாக இருக்கிறது' என அண்மையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றிலிருந்தே கிளம்பிய புகைச்சல் தற்பொழுது வரை நீடிக்கிறது. அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்திக்கும் தமிழிசையிடம் புதுவை முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இருக்கும் முரண்கள் குறித்துக் கேள்வி எழுப்பினால் ''இது வீட்டுக்குள்ள இருக்கிற சின்னச் சின்ன பிரச்சனை போன்றதுதான். இதில் மக்களைப் பாதிக்கக் கூடிய விஷயம் எதுவுமே இங்கு நடக்கவில்லை'' என்றும் ''எனக்கும் அவருக்கும் இருப்பது அக்கா தங்கை பிரச்சனைதான்'' என விளக்கங்கள் கொடுத்து வந்தார்.

 

இந்நிலையில், அண்மையில் தமிழகப் பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, புதுவை முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருப்பதாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் அவரின் பேச்சுக்குப் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் தேசிய கல்விக்கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் புதுவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய தமிழிசை, ''தமிழகத்தின் பாடநூல் கழகத்தின் தலைவர் என்ன சொல்கிறார் என்றால், தலையாட்டும் பொம்மையாக நமது முதல்வர் இருக்கிறார் என்று சொல்கிறார். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏனென்றால், யார் யாருக்கெல்லாமோ வாலாட்டிவிட்டு பதவியைப் பெற்றுவிட்டு நல்லதொரு திட்டங்களைக் கொடுத்த முதல்வரை அப்படிச் சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்றார்.