Skip to main content

நடிகையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

dimple hayathi police officer issue

 

தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை டிம்பிள் ஹயாதி தமிழில் பிரபுதேவா நடித்த 'தேவி 2' படத்தில் நடித்துள்ளார். மேலும் விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்த இவர், தனுஷ் இந்தியில் நடித்த 'அந்த்ராங்கி ரே' படத்திலும் நடித்துள்ளார். 

 

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டிம்பிள் ஹயாதி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே கட்டடத்தில் டிசிபி ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் டிசிபி ராகுல் ஹெக்டே, நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் இருவரும் வேண்டுமென்றே தனது வாகனத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

 

அதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவரும் வண்டியை மோதியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மற்றும் அவரது நண்பர் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், "டிசிபி ராகுல் ஹெக்டேவின் அழுத்தத்தால் தான் என் மீது தவறான வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் இந்த மனுவானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக டிம்பிள் ஹயாதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், நடிகையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.