Skip to main content

பழம்பெரும் பாலிவுட் நடிகர் காலமானார்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

vgdgedgd

 

‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன், தஸ்தான்’, ‘மொகல்-இ-அஸாம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். 

 

1944இல் சினிமாவில் அறிமுகமான இவர், இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1950, 60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவர், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். 1994இல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மேலும், இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ள இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உங்களைப் போன்று யாரும் இல்லை" - நடிகர் மம்மூட்டி உருக்கம்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

vgdbdbvd

 

'தேவதாஸ்', 'கங்கா யமுனா', 'ஆன், தஸ்தான்', 'மொகல்-இ-அஸாம்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். 

 

இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "புகழ்பெற்ற நாடக கலைஞனுக்குப் பிரியாவிடையளிக்கிறேன். நான் உங்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் அன்பு மற்றும் பாசத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். உங்கள் தயவும் சொற்களும் என்னைப் போன்றவர்களை உங்கள் சொந்தமாக உணரவைத்தன. எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்த ஒரு நடிகருக்குப் பிரியாவிடையளிக்கிறேன். உங்களைப் போன்று யாரும் இல்லை. அது உங்களுக்கு முன்னும் அல்லது உங்களுக்குப் பிறகும்" என பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

"அவர் எப்போதும் நம் நினைவுகளில் இருப்பார்" - மோகன்லால் இரங்கல்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
bvdbd

 

'தேவதாஸ்', 'கங்கா யமுனா', 'ஆன், தஸ்தான்', 'மொகல்-இ-அஸாம்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். 

 

இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "நடிகர் திலீப் குமார் இந்திய சினிமாவின் மூத்த உறுப்பினர் ஆவார். அவர் எப்போதும் நம் நினைவுகளில் இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்த லெஜெண்ட்டின் ஆன்மா நித்திய அமைதி பெறட்டும்" என பதிவிட்டுள்ளார்.