Skip to main content

துருவநட்சத்திரம் டீசர் வெளியான காரணம்...? 

Published on 05/06/2018 | Edited on 06/06/2018
vikram


இயக்குனர் கவுதம் மேனன் வெகு நாட்களாக இயக்கிவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டு டீசர்கள்   ஆரம்பத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் மூன்றாவது டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.  ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடிக்கின்ற இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், டிடி மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

 


இன்று காலை வெளியான படத்தின் டீசருக்கு இதுவரை சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இயக்குனர் கவுதம் மேனன் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்.... "ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. விக்ரம் சார் இது உங்களுக்கான படம்" என பதிவிட்டுள்ளார்.

 

 

vikram

 

மேலும் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சாமி ஸ்கொயர்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் விக்ரம் பேசும் பன்ச் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தின. இதை மறக்கச் செய்யத்தான்  துருவநட்சத்திரத்தின் இரண்டாவது டீசரை தற்போது வெளியிட்டுள்ளதாக திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.      



 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் விநாயகன் கைது! 

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Actor Vinayakan arrested by ernakulam police

 

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. 

 

நடிகர் விநாயகன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இன்று அவர் வசித்துவரும் எர்ணாகுளம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்கள் எர்ணாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடிகர் விநாயகனை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார்.

 

அப்படி அழைத்துச் செல்லப்பட்ட விநாயகன் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, மீண்டும் அங்கு சத்தம் போட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் மீது எர்ணாகுளம் போலீஸார், காவல் நிலைய பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தார் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் ரத்தத்தில் மதுவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

 

 

Next Story

வரிசைகட்டும் பட வாய்ப்புகள்; அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

actress Aishwarya Rajesh new film announcement

 

'காக்கா முட்டை' படத்தின் படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலையாளத்தில் ஹிட்டடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனைத்தொடர்ந்து 'டிரைவர் ஜமுனா', 'தீயவர் குலைகள் நடுங்க', 'மோகன்தாஸ் துருவ' நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆர் ஜே பாலாஜியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருடன் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், தீபா ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹம்சினி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.