Skip to main content

நீங்க தல ரசிகரா? தளபதி ரசிகரா?... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்த படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்க சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார். படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து படம் வெளியாகும் வரை சர்ச்சையாகவே இருந்தது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 

dhruv vikram

 

 

இதனை தொடர்ந்து இந்த படத்தை பல மொழிகளில் எடுக்க தொடங்கினார்கள். தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஈ4 எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை வாங்கியிருந்தது. முதலில் பாலா இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டு ஷூட்டிங்கும் முடிந்து, படம் ரிலீஸ் ஆகும் அளவிற்கு வந்தடைந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தை வேறொரு இயக்குநரை வைத்து முதலிலிருந்து தொடங்குவதாகவும் அதற்கும் துருவ்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று படக்குழு அறிவித்தது. பனித்தா சந்துவை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
 

super duper


இந்நிலையில் துருவ் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் நீங்க தல ரசிகரா? இல்லை தளபதி ரசிகரா என்று கேட்டார். அதற்கு சட்டென்று பதிலளித்த ஹானஸ்ட்டா சொல்லணும்னா நான் தளபதி விஜய்யின் ரசிகர் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.