Skip to main content

நீங்க தல ரசிகரா? தளபதி ரசிகரா?... ஹானஸ்ட்டாக பதிலளித்த விக்ரமின் மகன்...

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை குவித்த படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்க சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார். படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து படம் வெளியாகும் வரை சர்ச்சையாகவே இருந்தது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 

dhruv vikram

 

 

இதனை தொடர்ந்து இந்த படத்தை பல மொழிகளில் எடுக்க தொடங்கினார்கள். தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஈ4 எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை வாங்கியிருந்தது. முதலில் பாலா இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டு ஷூட்டிங்கும் முடிந்து, படம் ரிலீஸ் ஆகும் அளவிற்கு வந்தடைந்தது. தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநர் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இப்படத்தை வேறொரு இயக்குநரை வைத்து முதலிலிருந்து தொடங்குவதாகவும் அதற்கும் துருவ்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று படக்குழு அறிவித்தது. பனித்தா சந்துவை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
 

super duper


இந்நிலையில் துருவ் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் நீங்க தல ரசிகரா? இல்லை தளபதி ரசிகரா என்று கேட்டார். அதற்கு சட்டென்று பதிலளித்த ஹானஸ்ட்டா சொல்லணும்னா நான் தளபதி விஜய்யின் ரசிகர் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.