Skip to main content

“உங்களை போல லெஜண்ட்டா வர முடியாது ஆனா...”- நெகிழ்ச்சியில் த்ருவ் விக்ரம்

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

த்ருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ஆதித்ய வர்மா. இது தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். முதலில் தமிழில் இந்த படத்தை வர்மா என்ற தலைப்பில் இயக்குனர் பாலா, த்ருவ் விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை ட்ராப் செய்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்து வெளியிட்டது.
 

dhruv vikram

 

 

இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் விக்ரம் தன்னுடைய மகனுக்காக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட இயக்குனரை போலவே முழு வேலையையும் செய்திருக்கிறார் விக்ரம் என்று சொல்லப்பட்டது. இதற்காக தனக்கு வந்த பட வாய்ப்புகளை கூட தள்ளி வைத்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னை 10 லட்சம் பேர் ஃபாலோவ் செய்வதை முன்னிட்டு அதற்கு காரணம், ஆதித்ய வர்மா படத்தை உருவாக முழு காரணமாக இருந்த தனது தந்தை என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் த்ருவ் விக்ரம். 

அதில், “இன்று என்னால் பத்து லட்சம் பேருடன் பேச முடிகிறது என்றால் அதற்கு ஒரு மனிதனின் அயராத உழைப்பும், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி உறுதியாக நின்று இந்த படத்தை உருவாக்கியதும்தான். நான் நம்பிக்கையை இழந்துபோது கூட, அவர் தனியாக சுமையை தன் தோளில் சுமந்து வழி காட்டினார். உன்னுடைய வாழ்க்கை உன் மீதே உனக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தும், இதை விட்டுவிடுலாம் என யோசிக்க வைக்கும் ஆனால், எதையும் திரும்பி பார்க்காமல் நமது பணியை சீராக மேற்கொண்டால் எதுவும் சாத்தியம் என்பதை காட்டினார். ஆதித்ய வர்மாவில் அனைத்துமே நீங்கள்தான் அப்பா. என்னதான் ஆதித்ய வர்மா படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், நான் ரசித்தவரிடம் இருந்து வேலையை கற்றுக்கொண்டதனால், அது என் மனதிற்கு நெருக்கமான படமாக எப்போதும் இருக்கும். சாதாரண கான்செப்ட்டான ஆதித்யாவை எனக்காக இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய திட்டமிடலால் நான் இன்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். நம்முடைய கனவு சாத்தியப்படுவதற்காக நிச்சயமாக நன்கு உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். எனக்கு தெரியும் நான் உங்களை போல ஒரு லெஜண்ட்டாக ஆக முடியாது. ஆனால், அதற்காக நான் பெருமைப்படுகிறேன். பத்து லட்சத்திற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.