Skip to main content

விக்ரம் முதல் சச்சின் வரை...! பரவை முனியம்மா, மறக்க முடியுமா?

Published on 29/03/2020 | Edited on 30/03/2020

2003இல் பொங்கல் வெளியீடாக, பொங்கல் தினத்துக்கு சில நாட்கள் முன்னரே வெளியானது 'தூள்'. விக்ரம் - தரணி என்ற 'தில்' கூட்டணி மீண்டும் இணைந்து, அனைத்து சுவைகளும் நிறைந்த முழு கமர்சியல் படமாக உருவாக்கியிருந்தனர். ஆரம்பம் முதல் மின்னல் வேகத்தில் நகரும் படம். சண்டை ஒவ்வொன்றும் அதிரும். அதன் உச்சகட்டமாகப் படத்தின் முக்கியமான இடத்தில், பாட்டி பரவை முனியம்மாவை வில்லன்கள் துரத்த, 'எங்கே கொன்று விடுவார்களோ' என்ற பதைபதைப்புடன் ரசிகர்கள் பார்க்க, ஓடும் பரவை முனியம்மா திடீரென நின்று திரும்பி வருவார். "வாங்கடீ வாங்க... என் சிங்கத்தை கேளுங்கடா" என்று சொல்ல விக்ரம் கம்பீரமாக வந்து ஆக்ரோஷமாக அடிக்க, 'மதுர வீரன்தானே...' என்று பரவை முனியம்மா பாடிய அந்தப் பாடல் திரையரங்குகளில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போதைய ரசிகர்களின் 'கூஸ்பம்ப் மொமண்ட்'டாக அது அமைந்தது. பரவை முனியம்மாவின் குரலில் அந்தப் பாடலும் அதோடு நடக்கும் சண்டைக்காட்சியும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.
 

paravai muniyamma



'தூள்' படமும் முக்கியமாக அந்தப் பாடலும் பெற்ற வெற்றியில் தமிழகத்தின் செல்லப் பாட்டியானார் முனியம்மா. அதற்கு முன்பே பல ஆண்டுகளாக மதுரை சுற்றுவட்டாரங்களில் அவரது நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பிரபலம். அவரது கேஸட்டுகளின் விற்பனை அமோகம். திருவிழாக்களில் ஒலித்த அவரது குரல், 'தூள்' மூலம் திரையரங்குகளில் ஒலித்தது. இயக்குனர் தரணி, தன் படங்களில் நாட்டுப்புற பாடகர்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். 'எதிரும் புதிரும்' படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடல் பயங்கர ஹிட். 'தில்' படத்தில் மாணிக்க விநாயகம் பாடிய 'கண்ணுக்குள்ள...' பாடலும் ஹிட். அடுத்ததாக பெருவெற்றியைப் பெற்றது 'பரவை' முனியம்மா 'தூள்' படத்தில் பாடிய 'மதுர வீரன்தானே'. இந்த மூன்று படங்களுக்குமே இசையமைத்தவர் வித்யாசாகர். மாணிக்கவிநாயகம், பரவை முனியம்மா இருவருமே பாடகர்கள் என்பதைத் தாண்டி நடிகர்களாகவும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

 

sachin



'மதுர வீரன்தானே' பாடல் பெற்ற வெற்றி மிகப்பெரியது. ஒவ்வொரு திருமணம், திருவிழா என அந்த ஆண்டு தமிழகத்தின் கொண்டாட்டமாக அந்தப் பாடல் அமைந்தது. அதன் உச்சமாக, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அதிரடியாக ஆடி கிரிக்கெட் ரசிகர்களைக் குதூகலத்தில் வைத்திருந்த சச்சினின் ஆட்டத்துக்கு ஒரு ட்ரிபியூட்டாக, அவர் ஆடிய வீடியோவுடன் இந்தப் பாடலை இணைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். இப்படி ஒரு பாடலிலேயே மிகப்பெரிய புகழ் பெற்ற பரவை முனியம்மா, பல படங்களில் நடித்தார். பல நாடுகளுக்கும் பயணித்து நிகழ்ச்சிகளில் பாடினார். அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் என பல முக்கிய நாயகர்களுடன் நடித்துள்ளார். தனது அறுபது வயதுக்கு மேல் இவ்வளவு ஆக்டிவ்வாக இருந்த பரவை முனியம்மா, சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டார். வயதின் காரணமாக மறைந்துவிட்டார். ஆனால், இன்று கேட்டாலும் நம்மை தாளம் போடவைக்கிறது 'மதுர  வீரன்தானே' எனப் பாடிய அவரது குரல்.                   

 

                           
 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.