Skip to main content

அடுத்த வருடம் இணையும் தனுஷ்-செல்வராகவன்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

selva dhanush

 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர்  'புதுப்பேட்டை', '7ஜி ரெயின்போ காலனி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான, 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்கள், வெளியாகையில் தோல்வி அடைந்தாலும், இன்றுவரை ரசிகர்களால் பேசப்படுகிறது. ஆனால், இவர் கடைசியாக இயக்கிய சில படங்கள், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியைத் தழுவின.

 

செல்வராகவன், தனது தம்பியான தனுஷை வைத்து, 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தனுஷை வைத்து மீண்டும் செல்வராகவன், படம் இயக்கப் போகிறார் எனத் தகவல் வெளியானது. இதற்கு முன்பு தனுஷ்- செல்வராகவனின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் வெற்றிப்படங்களாக இருப்பதால், இவர்கள் தற்போது இணையும் படத்திற்கு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

இந்தநிலையில், தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருடம், மார்ச் மாதம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. தற்போது, 'கர்ணன்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு, செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இந்த படத்திற்கு டைரக்டர் செல்வராகவன் தான், ஆனா கதை அவருடையது இல்லை" - வெளியான ரகசியம்

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

naane varuven story and screenplay made by dhanush direction only selvaraghavan

 

கலைப்புலி எஸ் தாணுவுடைய 'வி கிரியேஷன்' தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  யுவன் இசையமைக்கிறார். செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகிய இருவரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு அடுத்தகட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் இப்படம் குறித்த ருசிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . அதன்படி நானே வருவேன் படத்திற்கு டைரக்டர் செல்வராகவன் தான். ஆனால் கதை அவருடையது இல்லையாம். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை தனுஷ் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். ஆனால் கதை திரைக்கதை எழுதி நடிக்கும் தனுஷுடன் இணைந்து நடித்து நானே வருவேன் படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

 

 

Next Story

இளவரசன் திரும்புகிறான்... 'ஆயிரத்தில் ஒருவன் - 2' அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

selvaragahavan dhanush announces AO2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரவீந்திரன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், பார்த்திபன், கார்த்திக், ரீமாசன், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம், 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

 

சோழ வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும், இன்றளவும் சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. இப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று (டிசம்பர் 31, 2020) 'ரீ-ரிலீஸ்' செய்யப்பட்டது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.

 

இதையடுத்து, இயக்குனர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பதிவில், "இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

செல்வராகவனின் ட்வீட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "மிகப் பெரிய பணி. முன் தயாரிப்புக்கு மட்டும் ஒருவருடம் தேவைப்படும். ஆனால், இது செல்வராகவனின் கனவுப் படம். இப்படத்திற்காக சிறிதுகாலம் நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் காத்திருப்பை மதிப்புமிக்கதாக மாற்ற எங்கள் முழு உழைப்பையும் தருவோம். 2024-ல் இளவரசன் திரும்புகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.