Skip to main content

‘தர்ஷன் நான் உன்னவிட்டு போறேன்... உனக்கும் ஷெரினுக்கும் இடையில நான் யாரு?’ - கண் கலங்கிய தர்ஷன் காதலி

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்குகிறார்.  
 

sanam shetty

 

இந்த நிகழ்ச்சியை மக்கள் பலரும் பார்த்து வருகிறார்கள் என்று கமல் ஹாசன் உள்ளே பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவுரை செய்வார். மக்கள் பலரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இது இருப்பதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை வந்துள்ளது.

இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் போட்டியாளர்கள் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா, ஷெரின் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.
 

zombi


இந்த சர்ச்சையை அடுத்து தர்ஷன் எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது நட்பு மட்டும்தான் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

For ur own happiness and for everyone's wishes im letting u go @tharshan_shant ? im out of ur life! Shine like a diamond tat u r ❤ The world is there now to take care of u. They will give u the best life and best love. I dont hv the strength anymore to deal with this constant hatred coming from everywhere. The whole world wants to save u from me. Now ur saved from me. Tharshan fans and Tharshan Sherin love fans u can celebrate now? the best love story in Bigboss wins ? They both dont need to sacrifice for my sake after 75 days. Il sacrifice my love for his happiness and victory? My family is disheartened. Im completely broken and its time to take this call. Tharshan u will always be in my heart and in my prayers. But il never disturb ur life again. I love u today n forever❤ Goodbye Tharshan.

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on


தர்ஷனுக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் நான் கொடுக்கும் இண்டர்வியுவால்தான் தர்ஷனை டார்கெட் செய்கிறார்கள் என்று சொல்லும்போது என்னுடைய மனம் உடைந்துவிட்டது. நான் கொடுத்த ஒவ்வொரு இண்டர்வியுவிலும் தர்ஷனை பற்றி தவறாக கூறியது இல்லை என்று கூறியுள்ளார். 

மேலும் பேசியவர்,  “நான் கொடுக்கும் இண்டர்வியூவால்தான் அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். அது லவ்வா, நட்பா என்று ஒன்றுமே புரியவில்லை. என்னிடம் பலரும் நான் தான் தர்ஷன், ஷெரின் காதலுக்கு குறுக்கே இருப்பதாக சொல்கின்றனர். என்னை மன்னித்துவிடுங்கள் தர்ஷன் மற்றும் ஷெரின். நான் தர்ஷனை விட்டு விலகுகிறேன். அவர் வெளியே வந்தாலும் நான் பேசமாட்டேன்” என்று கண் கலங்க பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி அளித்த புகாரில் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

bigboss sanam complaint dharshan chennai high court

 

பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி அளித்த புகாரில் பதிவான வழக்கில், தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த தர்ஷன், தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும், திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து, தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவுபடுத்தியதாகவும், 4-வது சீசனின் போட்டியாளர் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

bigboss sanam complaint dharshan chennai high court

 

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்கக் கோரி, தர்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய்ப் புகார் அளித்துள்ளதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இரு வாரங்களுக்கு, தினமும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தர்ஷனுக்கு நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

 

 

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார்.