மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ரஜினியா? பதிலளித்த தனுஷ்...

நடிகர் தனுஷ் நடித்த சர்வதேச படமான 'தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரைப்படம் ‘பக்கிரி’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று தமிழில் டப் செய்யப்பட்டு நடிகர் தனுஷால் வெளியிடப்பட்டது.

rajni dhanush

ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் பிரான்ஸ் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையும், நிகோலஸ் எரேரா பின்னணி இசையும் அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், சர்வதேச படத்தில் பணியாற்றிய தனது அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் உரையாடிய நடிகர் தனுஷ், ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட பாலிவுட்டை படங்களை தொடர்ந்து தந்து அடுத்த பாலிவுட் படம் பற்றிய தகவலை பகிர்ந்துக் கொண்டார்.

மேலும், மீண்டும் தனுஷ் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தை பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்தான் இயக்குகிறார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், அதுபோல எந்த திட்டமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

DHANUSH rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe