Skip to main content

உலக புகழ் பெற்ற திரைப்பட விழாவில் தனுஷ் 

Published on 26/04/2018 | Edited on 28/04/2018
dhanush


நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம்  'தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் ஃபகிர்'. இதே பெயரை கொண்ட ஐக் வார்ட்ரோபின் பிரபல நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். வருகிற மே 30ஆம் தேதி பிரான்சில் ரிலீசாக இருக்கும் இப்படத்தை உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதில் நடிகர் தனுஷும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இப்படத்தை ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் வருகிற மே 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தனுஷ் 

Published on 29/05/2018 | Edited on 30/05/2018
dhanush


நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற ஹாலிவுட் படம் 'வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்ற பெயரில் தமிழில் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷனுக்காகவும், திரையிடலுக்காகவும் பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ் அங்கு கேன்ஸ் விழாவில் பங்கேற்றார். இதையடுத்து அவர் இந்தியா திரும்பியதும் 'வட சென்னை' படத்தை வெளியிடும் வேலைகளை ஆரம்பித்து அதேசமயம் மாரி 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் இணைகிறார். இதை முடித்த கையோடு 'ராஞ்சனா' புகழ் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிப்பதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்டில் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் கூடவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி நடிகர் தனுஷ் ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என மூன்று படவுலகில் அடுத்தடுத்த படங்கள் வெளிவரவுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story

தம்பி ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் - தனுஷ் உருக்கம்

Published on 25/05/2018 | Edited on 28/05/2018
danush


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த போராட்டத்தின் போது போலிசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்  13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி, கமல் மற்றும் சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் ரகு என்கிற காளியப்பன் அவர்கள் நடிகர் தனுஷின் நற்பணி மன்றத்தில் உறுப்பினர் ஆவார். இதையடுத்து இவர் இறந்ததற்கு தற்போது நடிகர் தனுஷ் தனது இரங்கலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S. ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.