தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. வருகிறா ஆகஸ்ட்டில் படம் வெளியாகலாம என எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush

Advertisment

Advertisment

இதன் இடைவேளையில் செந்தில்குமார் படத்திலும் தனுஷ் பிஸியாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தனுஷின் டேட்டிற்காக ராட்சசன் இயக்குநர் ராம்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இவர்கள்தான் அடுத்து தனுஷை வைத்து படம் எடுக்க போகிறார்கள் என்று முன்பே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன.

இதனையடுத்து செல்வராகவனும் தனுஷும் இணைந்து படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என்றும் பேசப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷை வைத்து படம் இயக்குகிறார். அது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகும் படம் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்துதான் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.

தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிறா ஆகஸ்ட் மாதம் லண்டனில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படுவதாகவும். இதற்காக 60 நாட்கள் தனுஷ் தேதிகளை ஒதுக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.