மாரி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் வடசென்னை 2 படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து அசுரன் என்றொரு படத்தை தொடங்கினார்கள். இது வெக்கை என்னும் நாவலை மையமாக வைத்து உருவாகும் படமாகும். இந்த படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு இயக்குநர்கள் இல்லாமல் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

dhanush

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாகவும், அது முழுக்க முழுக்க லண்டனில் ஷூட்டிங் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தனுஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இப்படி பல படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் அடுத்து தனுஷ் வடசென்னை 2 வை ட்ராப் செய்துவிட்டார் என்று தகவல்கள் பரவ தொடங்கின.

இந்நிலையில் தனுஷ் ஒரு ட்வீட்டை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை தெளிவுப்படுத்தியுள்ளார். “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் சொல்லுவேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். நன்றி. லவ் யூ...” என்று பதிவிட்டுள்ளார்.