மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisment

ms dhoni

இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது.

Advertisment

இந்நிலையில், நேற்றைய மேட்ச் குறித்து நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். அதில், “அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடினர். உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா, பும்ராவின் பந்துவீச்சு, விராத் கோலியின் தலைமை, ரிஷப் பந்த், ராகுல், ஜடேஜா போன்ற இளம் துப்பாக்கிகள் காட்டிய வேகம்.. ஆஹா அற்புதம். தோனியை எப்போதும் போலவே நேசிக்கிறோம். பெருமிதம் கொள்ளுங்கள் வீரர்களே” என்று பதிவிட்டுள்ளார்.