Skip to main content

"இந்திய அரசு இதை ஆதரிக்கும், காப்பாற்றும் என்று நம்புகிறேன்" -தயாரிப்பாளர் தனஞ்செயன் நம்பிக்கை!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020
hfddhdf

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

 

அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறைக்கு ரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, வணிக வளாகங்கள் இயங்க அனுமதி, 75 நபர்கள் மிகாமல் திரைப்பட படப்பிடிப்பு நடத்தலாம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கிடையே கரோனா முடக்கம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதற்கு பல்வேறு திரைபிரபலங்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்....

 

"#SupportMovieTheatres #SaveCinemas நாம் விரைவில் திரையரங்குகளுடன் திரும்பி வருவோம் என உறுதியாக நம்புகிறேன். இந்திய அரசு சினிமாவை ஆதரிக்கும் & காப்பாற்றும் என்றும் நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்