Skip to main content

திடீரென இயக்குனராக மாறிய பிரபல தயாரிப்பாளர்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் முதல்முறையாக இயக்கவும் உள்ளார்.

 

dhana

 

 

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசும்போது.... ''நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறேன். இது ஒரு திகில் படமாகும். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இதற்கெல்லாம் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்" - மனம் திறக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

"Udhayanidhi Stalin is responsible for all this" - says producer Dhananjeyan

 

நக்கீரன் ஸ்டூடியோவிற்கு, தயாரிப்பாளர் தனஞ்செயன் தமிழ் சினிமாவின் வியாபார யுக்தி; புரொமோசன் விசயங்கள் குறித்து பேசினார்; அப்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றிய நம்முடைய கேள்விக்கு அவர் அளித்த பதிலை காண்போம்.

 

ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மிகப்பெரிய பலமே அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு நெட்வொர்க் இருக்கிறது. எல்லா பெரிய படங்களுமே அங்கிருந்து வெளியாகிறது. அதே சமயத்தில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படுகிற படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெளியிடும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது

 

திரையரங்குகள் ரெட் ஜெயண்ட்டின் வெளியீடு என்றால் லாபத்திலிருந்து 70 சதவீதம் பணத்தை கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு என்றால் 50 சதவீதம்தான் தருவார்கள். இதனாலேயே தான் அனைத்து தயாரிப்பாளர்களுமே ரெட் ஜெயண்ட் வெளியிட வேண்டும் என்று அவர்களிடமே குவிகிறார்கள்

 

ரெட் ஜெயண்ட் வெளியிடப்போகிறார்கள் என்றாலே அந்தப் படத்திற்கு வேறு எதுவும் பிரச்சனை வராது. வெளியீடும் சுமூகமாக நடந்துவிடும். அத்தோடு லாபத்தினையும் கணக்கிட்டு உங்களுக்கான பங்கினைக் கொடுத்து விடுவார்கள்

 

உதயநிதி ஸ்டாலின் அவர்களோட பங்களிப்பு என்பது இந்த 2022-ல் தமிழ் சினிமாவிற்கு மிக முக்கிய பங்களிப்பாகும். இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக சிறப்பான வருடமாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் உதயநிதி ஸ்டாலின் தான். அவர் நிறைய படங்களை வெளியிட்டு பெரிய அளவிலான வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்

 

இப்போது அமைச்சர் ஆகிவிட்டார்; அவருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன; ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Next Story

“இதுதான் அஜித்தின் பாலிசி” - சீக்ரெட் பகிரும் தயாரிப்பாளர் தனஞ்செயன்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

 “It's Ajith's policy” - Producer Dhananjeyan shares the secret

 

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. அதன் புரொமோசன் பணிகளில் எந்த விதத்திலும் அஜித் ஈடுபடவில்லையே? ஒரு திரைப்படத்தின் நடிகர் அதன் புரோமோசன் பணிகளில் ஈடுபடுவது என்பது சினிமாவை பொறுத்தவரை வசூலிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தானே? ஏன் அஜித் ஈடுபடுவதில்லை போன்ற கேள்விகளை தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

“அஜித் கடைசியா ஒரு படத்திற்கு புரொமோசன் ஒன்றைச் செய்தார் என்றால் அது பில்லா படத்திற்கு மட்டும்தான். பில்லா பட புரொமோசனுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அஜித் வந்திருந்தார். அப்போது அவரை அங்குச் சந்தித்துப் பேசினேன். அதற்குப் பிறகு கடந்த 15 வருடங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரும் அதற்குப் பிறகு எந்தப் படத்தின் புரொமோசனிலும் கலந்து கொள்வதில்லை.

 

அதே சமயத்தில், புரொமோசன் குறித்த அவரது எண்ணமும் மாறிப்போனது. அவர் சொன்னதையே இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ‘ஒரு படம்தான் அதற்கே சிறந்த புரொமோசன்’ அஜித்தைப் பொறுத்தவரை தன் திரைப்படம் வந்தாலே போதும். அதுவே அதற்கான ஓப்பனிங் வசூலைக் கொண்டு வந்துவிடும்.

 

மேலும், தன்னுடைய ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நான் எதுவுமே பண்ணத் தேவையில்லை. என் ரசிகர்களே படத்தினை ஓட வைப்பார்கள். படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்து டீசர், ட்ரைலர், பாடல் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். அதில், தான் தலையிடுவதில்லை என்பது அஜித்தின் பாலிசி.

 

அஜித் புரொமோசன் பண்ணவில்லை என்பதால் எல்லாம் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை. அஜித் சொன்னது போலவே அவர் படமே அதற்கு புரொமோசன் தான் போல.