Skip to main content

"நீங்கள் பூரணமாக குணமடைந்து நல்லபடியாக வீடு வந்து சேர வேண்டும்" - தேவா உருக்கம்!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
hr

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல் நிலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் தேவா எஸ்.பி.பி உடல்நலம் குறித்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...

 

"பாலு சார், இந்த உலகமக்களோடு சேர்ந்து நாங்களும் தினமும் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் பூரணமாக குணமடைந்து நல்லபடியாக வீடு வந்து சேர வேண்டும்." என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்