Skip to main content

'பத்மாவதி' தீபிகா படுகோனுக்கு பிடித்த உடை!

Published on 23/03/2018 | Edited on 24/03/2018

deepika


தீபிகா படுகோன் சித்தூர் ராணியாக நடித்து, பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்த பத்மாவத் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. தீபிகா படுகோன் தலைக்கு விலை நிர்ணயித்தப்போதும் அசராமல் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். மேலும் இப்படத்தில் தீபிகா படுகோன்  அணிந்த உடைகளும், நகைகளும் பலரிடம் பாராட்டுகள் பெற்று பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்நிலையில் படத்தில் அணிந்த நகைகள், உடைகள் குறித்து தீபிகா பேசுகையில்... "பத்மாவத் என் வாழ்வில் முக்கியமான படம். அதில் நான் அணிந்திருந்த நகைகள், உடைகளில் பெண்களும், ரசிகர்களும் மனதை பறிகொடுத்தனர். நான் எங்கு போனாலும் அந்த உடைகள், நகைகள் பற்றியே பேசினார்கள். குறிப்பாக கிளைமாக்சில் தீயில் குதித்து இறக்கும்போது நான் அணிந்திருந்த உடைகளும் என் முகபாவனைகளும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. ரசிகர்களை போல் நானும் கிளைமாக்சில் அணிந்த உடைகள் மீது எனது மனதை பறிகொடுத்து இருக்கிறேன். எனவே அவற்றை என்னுடனேயே நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த உடைகளை எனக்கு தரும்படி டைரக்டரிடம் கேட்டு இருக்கிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு இதை மட்டும் தான் திருப்பி தர முடியும் - புதிய முயற்சியில் தீபிகா 

Published on 06/06/2018 | Edited on 08/06/2018
deepika padukone


ஹிந்தியில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தீபிகா படுகோன் 'கோச்சடையான்' அனிமேஷன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'பத்மாவத்' மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் நடிப்பு மட்டுமல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய் தயாரிப்பிலும் இறங்கவிருக்கிறார்.

 

 


இது குறித்து அவர் பேசுகையில்... "பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். 'பத்மாவத்' படம் வசூல், கான் நடிகர்களை மிஞ்சிவிட்டது என்று பேசினார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களுக்கு என்னால் என்ன திருப்பி கொடுக்க முடியும்.... எனக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான். எனவே நல்ல படங்கள் தயாரித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன்" என்றார்.