Skip to main content

2023 ஆஸ்கர் விழாவில் தீபிகா படுகோனே

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Deepika Padukone also presenting 2023 Oscars award function

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா வருகிற 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

இந்த விழாவில் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது. 

 

இந்த நிலையில் 95வது ஆஸ்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் விழாவை பார்க்க அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சர்வதேச அளவில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வருகிறார். கடந்த வருடம் ஆஸ்கருக்கு இணையாக சினிமா பிரபலங்கள் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களின் ஒருவராக இருந்தார். உலக கோப்பை கால்பந்து 2020 இறுதி போட்டியில் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவிலும் பங்கேற்கவுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முத்தக் காட்சி - படக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Fighter gets legal notice from IAF officer over kissing scene

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்டர்’. வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் இருவரும் இசையமைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. 

இதையடுத்து படத்தின் மீதான விமர்சனம் குறித்துப் பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததே கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட போனதில்லை. அப்படியிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்” என்றிருந்தார். இது சர்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இப்படத்தில் விமானப்படையை அவமதித்து விட்டதாக அசாமைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தின் இறுதியில் விமானப்படை சீருடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முத்தக் காட்சியில் நடித்து அவமதித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதேபோல் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த 'பதான்' படத்தில், 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இப்படம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

Next Story

விமானத்தில் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பாராட்டு

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Pilot gives a big shoutout to Elephant Whisperers' Bomman and Bellie

 

கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து எடுக்கப்பட்டது. இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தது. 

 

இதன் பிறகு உலகளவில் கவனம் பெற்ற பிரபலங்களாகிவிட்டனர் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கெளரவித்திருந்தார். 

 

இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தம்பதி விமானத்தில் பயணித்துள்ள நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் அந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கையில், ஊட்டிக்கு அந்த தம்பதி விமானம் மூலம் திரும்பியுள்ளனர். அப்போது விமானி ஒருவர், "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் நட்சத்திரங்கள் நம்முடன் பயணிக்கிறார்கள். அவர்கள் எங்கள் விமானத்தில் பயணிப்பது மகிழ்ச்சி" எனக் கூறினார். பின்பு பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி அனைவரின் முன்பும் எழுந்து நிற்க பயணிகள் அனைவரும் அவர்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.