Skip to main content

கலவையான விமர்சனம்... ‘டியர் காம்ரேட்’ டீம் எடுத்த அதிரடி முடிவு... 

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

கடந்த வெள்ளிக்கிழமை அன்று விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா நடிப்பில் டியர் காம்ரேட் படம் உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மொத்தம் நான்கு மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்ததால் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனாலும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
 

rashmika vijay

 

 

இதனால் படக்குழு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. படத்தின் நீளம்தான் மிகப்பெரிய குறையாக ரசிகர்களிடையே பார்க்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் இப்படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும் என்பது பலரின் கருத்தாக இருந்தது.
 

இந்நிலையில் படக்குழு 14 நிமிடங்கள் காட்சியை படத்திலிருந்து நீக்கியுள்ளது. குறிப்பாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட கேண்டீன் பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு சம்பந்தம் இல்லதா காட்சிகள் என்று கருதப்பட்ட சில காட்சிகளை நீக்கியுள்ளனர். தற்போது 14 நிமிடங்கள் கட் செய்யப்பட்டு 156 நிமிடங்கள் படமாக இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மாணவர்களுக்கு ராஷ்மிகா வாழ்த்து

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
rashmika abut school students

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும், பிளஸ் 1 - 14ம் தேதி,  பிளஸ் 2 - 6ம் தேதி வெளியிடப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்வு நடந்து கொண்டிருக்கும் அனைவருக்கும்.. ஆல் தி பெஸ்ட். அனைவரும் நன்றாக பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.