Skip to main content

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ‘டேனி’!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
vara

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 90 நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பொழுதுபோக்கு இடங்களான மால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

 

சினிமா பட ஷூட்டிங்கும் எடுக்க முடியாமல் தமிழ் திரையுலகமே பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. இதனிடையே ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட  திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமும் கீர்த்தி நடித்த பெண்குயின் படமும் வெளியாகியுள்ளது. இப்படங்களை தொடர்ந்து, பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'டேனி' படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படம் எப்போது ரிலீஸாகும் போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

 

சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேனி' படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

  

NN

 

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ நாடு முழுவதும் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு  கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மொத்தமாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜேஷ் ஹலீம் என்ற நபரின் உதவியுடன் இவை கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 14வது நபராக இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமிக்கு உதவியாளராக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

 

NIA summons actress Varalakshmi

 

போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் வழியாக வந்த பணத்தின் மூலம் சினிமாவில் பலருக்கும் ஆதிலிங்கம் பைனான்ஸ் உதவி செய்திருப்பதும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 'டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற அரசியல் கட்சியில் தேசிய துணைத் தலைவராகவும் இவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை வரலட்சுமிக்கு ஏதேனும் தகவல்கள் தெரியுமா என்ற அடிப்படையில் விசாரிக்கவும், எந்த அடிப்படையில் அவர் உதவியாளராக இருந்தார் என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் என்.ஐ.ஏ, நடிகை வரலட்சுமியிடம் விசாரிக்க திட்டமிட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்காக ஆஜராக இயலாது என அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக நடிக்கும் பேன் இந்திய படம்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021
bdhdfsnbfdnb

 

'ரோக்' திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி. ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டரில் குண்டலி (ஜாதகம்) போன்ற லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்திய படமாக உருவாகும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, ராதாகிருஷ்ணா தெலு தனது ரெஸ் என்டர்டெயின்மென்ட் எல்எல்பி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள 'தத்வமசி' படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.