Skip to main content

வில்லன் நடிகர் கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம்...

Published on 14/03/2019 | Edited on 14/03/2019
villain


டேனியல் பாலாஜி, தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். வேட்டையாடு விளையாடு படத்தில் இவருடைய நடிப்பு இன்றுவரை ரகுவரனுக்கு அடுத்த ஒரு சிறந்த தமிழக வில்லன் என்று பெயரெடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட வடசென்னை படத்தில் இவருடைய  ‘தம்பி’கதாபாத்திரம் எல்லோரையும் ஈர்த்தது.
 

இந்நிலையில், ஆவடி செக்போஸ்ட் அருகே டேனியல் பாலாஜி அங்காள பரமேஸ்வரி கோவிலை கட்டி நிறுவியுள்ளார். நேற்று இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது இது குறித்து பேசியவர், “ இந்த கோவிலை கல்லால் கட்டி, கும்பாபிஷேகம் வேண்டும் என்று எனக்கு ஒரு சின்ன பிராப்தம் இருந்தது. இந்த கோவிலை கட்ட உதவியாக இருந்தது எனது குடும்பத்தாருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீரியல் நடிகர் டூ சீரியஸ் வில்லன் - டேனியல் பாலாஜியின் கரியர் கிராஃப்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
daniel balaji cinema carrier

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற நடிகர் டேனியல் பாலாஜி. இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினரும் கூட. சிறு வயதிலே ராதிகா நடித்த சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் அடுத்து நடித்த அலைகள் சீரியல் முதல் அவருக்கு டேனியல் பாலாஜி என்று பெயரிடப்பட்டது. அதற்கு முன்பு வரை பாலாஜி என்று மட்டுமே அவருக்கு பெயராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னை தரமணி கல்லூரியில் இயக்குநர் படிப்பை முடித்த டேனியல் பாலாஜி, கமலின் மருதநாயகம் படத்தில் யூனிட் புரொடக்‌ஷன் மேனேஜராக ஒரு மாதம் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னதாக ஹாலிவுட் படங்களில் லைன் புரொடியூசராக வேலை பார்த்ததால், மருதநாயகம் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததாக நக்கீரன் ஸ்டுடியோ பேட்டியில் அவரே கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாந்த், சினேகா, வெங்கட் பிரபு நடித்த ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் குழுவில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து சூர்யா - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான காக்க காக்க படத்தில் பெரும்பாலான காட்சிகள் வரும் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை பெற்றார். அவருடைய வசன உச்சரிப்பு தனித்தன்மையோடு இருந்தது. இப்படத்தை அடுத்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் சீரியசான வில்லன் ரோல் ஏற்று நடித்திருந்தார். இவரது நெகட்டிவ் ஷேட் உள்ள நடிப்பு அனைவரது கவனத்தை ஈர்த்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிரபலமான நடிகராக வலம் வந்தார். இந்த கதாபாத்திரமே அவருக்கு அடையாளமாக மாறிவிட்டது. அந்தளவிற்கு ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக தனது நடிப்பை ரசிகர்கள் மனதில் பதிவுசெய்திருந்தார்.

அதன் பிறகு அதே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திர கெட்டப் மற்றும் லுக் அவரது தனித்தன்மை இமேஜை கூட்டியது. குறிப்பாக மருத்துவமனையில், தனுஷை மிரட்டும் காட்சி ரசிகரக்ளின் ஃபேவரட்டாக அமைந்தது.  இதைத் தொடர்ந்து வை ராஜா வை, பைரவா, இப்படை வெல்லும் என பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இதனிடையே மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் வந்த வட சென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இப்படி தொடர்ந்து படங்களை கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வந்த டேனியல் பாலாஜி (48) இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மரணத்திற்குப் பிறகும் உலகை காணும் டேனியல் பாலாஜி 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
 Daniel Balaji sees the world again

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.