Skip to main content

கமல் இதைச் செய்யலாமா? விளாசும் நடன இயக்குநர் சாய் ஸ்ரீராம்!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

Sai Sriram

 

பிரபல நடன இயக்குநர் சாய் ஸ்ரீராம், தற்போது 'குமாரன் சம்பவம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நம் சமூகத்தில் பரதநாட்டியம் குறித்தும் பரதநாட்டியம் கற்பது குறித்தும் நிலவிவரும் உண்மைக்கு மாறான கருத்துகளை உடைக்கும் நோக்குடன் இப்படமானது உருவாகியுள்ளது. இப்படம் குறித்து விரிவாக அறிய நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சாய் ஸ்ரீராமை சந்தித்தோம். படம் குறித்து நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட சாய் ஸ்ரீராம், பரதநாட்டியம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தவறாக காட்சிப்படுத்தப்படுவது குறித்து தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். முன்னனி நடிகர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதையும் கடுமையாகக் கண்டித்தார். அவை பின்வருமாறு...

 

"பரதநாட்டியம் என்று தமிழ் சினிமாவில் காட்டுவது பரதநாட்டியமே அல்ல. ஒரு மேக்கப் கலைஞருக்கு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஞானம் இல்லையென்றால் அமெரிக்காவரை சென்று அங்குள்ள ஒருவரை அழைத்து வர்றீங்க. ஒரு ஃபைட் மாஸ்டருக்கு சண்டைக்காட்சியில் ஞானம் இல்லையென்றால் அமெரிக்காவில் இருந்து அழைத்து வர்றீங்க. ஆனால், பரதநாட்டியம் விஷயத்தில் அருகில் உள்ள கலைஞர்களைக் கூட ஏன் அழைக்கமட்டுக்கீங்க. பரதநாட்டியம் என்பது நம்முடைய நாட்டின் பெருமை. அதை ஏன் புரிஞ்சுக்கமட்டுக்கீங்க. 

 

சினிமாவில் காட்டப்பட்ட அபத்தமான காட்சிகளையெல்லாம் வைத்து தமிழ்ப்படம் என்று ஒருவர் படம் எடுத்தார். அவரை சினிமாக்காரங்க எவ்வளவு திட்டுனாங்க. இங்க 35 வருஷமா பரதநாட்டியம் கலையை தவறாகக் காட்டுறீங்க. விஸ்வரூபம் படத்துல கமல் ஏன் அப்படி இருக்கிறார் என்பது குறித்து எந்த விவரணையும் இருக்காது. அவர் பரதநாட்டிய கலைஞர் என்பதால் பெண்மைத் தன்மையுடன் இருக்கிறார்; அதனால் அவர் பொண்டாட்டி அவரை வெறுக்கிறார் எனக் காட்டியிருப்பாங்க. இது எவ்வளவு பெரிய தவறான முன்னுதாரணம். சலங்கை ஒலி என்பது கமல்ஹாசனின் கிரீடத்தில் உள்ள ஒரு கோஹினூர் வைரம்போல. பரதநாட்டியம் மூலம் அவ்வளவு பெயரும் புகழும் சம்பாதித்த ஒருவர் இதைச் செய்யலாமா? 

 

வரலாறு படத்திலும் இதேதான். அஜித்திற்குப் பரதநாட்டியம் என்றால் என்னன்னே தெரியாது. இது மாதிரி ஒரு கேரக்டர் வருதுன்னா அதை ஏற்று நடிக்க நமக்குத் தகுதி இருக்கான்னு யோசிக்கணும். குறைந்தபட்சம் ஒரு மாதமாவது பயிற்சி எடுக்கணும். அதைவிடுத்து, 8 மணிக்கு ஸ்பாட்க்கு வந்துட்டு 9 மணிக்கு நாட்டிய எக்ஸ்பர்ட் மாதிரி நடிப்பது எப்படி சாத்தியம். உங்களுடைய பெயரை நிலைநாட்டிக்கொள்ள ஒரு கலையை ஏன் கெடுக்குறீங்க" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.