Advertisment

“திரும்பவும் சொல்றேன் 'சிம்பதி'க்காக இந்த பாடலை கேட்க வேணாம்”- திருமூர்த்தி பாடல் குறித்து இமான்...

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ‘விஸ்வாசம்’.இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் பாடல் கண்ணான கண்னே, இந்த பாடலை திருமூர்த்தி என்பவர் பாடியது சமூக வலைதளங்களில் வைரலானது. திருமூர்த்திக்கு பாட்டு பாடுவதில் ஆர்வம் அதிகமாகவும், திறமையும் கொண்டிருந்தார்.

Advertisment

imman

இதைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், அவரை நேரில் அழைத்து ஊக்கப்படுத்தியுள்ளார். மேலும் அவருக்கு ஒரு படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்பின் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'சீறு' படத்தில் திருமூர்த்திக்குப் பாடும் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்தில் திருமூர்த்தி பாடியுள்ள 'செவ்வந்தியே' என்ற பாடல் டிசம்பர் 2 மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

iruttu

அதில், "என்னுடன் இருப்பவர் திருமூர்த்தி. எங்களுடைய கூட்டணியில் இப்போது 'செவ்வந்தியே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 'சீறு' படத்தில் இடம்பெறும் அந்தப் பாடலை பாடலாசிரியர் பார்வதி எழுதியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் பாடலைக் கேளுங்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

அவுட் ஆட் சிம்பத்தி(அனுதாபத்தில்) இந்தப் பாடலை கேட்க வேண்டாம். உண்மையிலேயே இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால், பலருக்கும் ஷேர் செய்யுங்கள். திரும்பவும் சொல்கிறேன் யாரும் அனுதாபத்தில் அதைச் செய்யாதீர்கள். அதுதான் திருமூர்த்தி போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.

jada

இந்த ஒரு பாடல் வெற்றியின் மூலமாக இன்னும் பல பாடல்களை திருமூர்த்தி பாட வேண்டும். அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் வேண்டி விரும்பி கேட்கக் கூடிய ஒரு விஷயம். இவரை வெவ்வேறு பாடல்களுக்கு உபயோகிக்க வேண்டும். இவரை இன்னும் அடுத்த தளத்துக்குக் கொண்டு போக வேண்டும்" என்று பேசியுள்ளார் இமான்.

d.imman jiiva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe