Skip to main content

100க்குத் தடையில்லை! - நீதிமன்றம் உத்தரவு 

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. ஆரோ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று (மே 9) வெளியாவதாக அறிவிக்கப்பட்டு விளம்பரங்கள் வெளியாகின.

 

adharva in 100



சிறப்புக்காட்சிகளில் படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி விமர்சனங்களை வெளியிட்டனர். ஆனால், இன்று காலை திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. படம் குறித்த ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் படம் வெளியாகவில்லை என்று தகவல் வந்தது.

 

court order 100



இன்று நடந்த விசாரணையின் முடிவில் 'பலூன்' படம் தொடர்பான காப்பி ரைட் வழக்கில் '100' படத்தின் வெளியீட்டை தடை செய்ய முடியாது என்றும் '100' படம் வெளியாகலாம் என்றும் குறிப்பிட்டு ஆணை வெளியிட்டது நீதிமன்றம். இதனால் நாளை '100' படம் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதர்வா இதற்கு முன்பு நடித்து வெளியான 'இமைக்கா நொடிகள்' படம் வெளியான போதும் சில தடைகள் ஏற்பட்டு தாமதமானது. பின்னர் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அது போல '100' படமும் வெற்றி பெறுமா என்பதை நாளை பார்ப்போம்.        

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களை வைத்து மிரட்டுகிறார்கள்; கமல் ஆள் ரெடி செய்து அனுப்பினார் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

producer k rajan talk about kamalhassan

 

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இராஜமோகன் இயக்கும் இப்படத்தில் அதர்வா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்துகொண்டார். 

 

இவ்விழாவில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது: "‘அட்ரஸ்’ பாடல் நன்றாக இருக்கிறது, ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். என்னுடைய  கருத்து என்னவென்றால் என் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும். பின் டெக்னிஷியன், நடிகர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் எல்லாம் தலைகீழாக இருக்கிறது. தமிழ்மணி எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். ஆனால் அவர் படம் செய்து பல காலம் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு நன்றாக இருக்கிறது மக்கள் கூட்டமாக வருகிறார்கள். சினிமாவில் தயாரிப்பாளர்கள் சரியில்லை. பின்னால் இழுப்பதில் குறியாக இருக்கிறார்கள். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா  பற்றியும் நடிகர் யாரைப் பற்றியும் பேசவில்லை. பேசினால் பிரச்சனை வருகிறது. ரசிகனை வைத்து மிரட்டுகிறார்கள்.  ரசிகனை வைத்து மிரட்டினால் அவ்வளவுதான். கமல் ரசிகர்கள் மிரட்டியபோது அவர்களை ஜெயிலுக்கு அனுப்பினேன். ஆனால் கடைசியில் அவர்களை நான்தான் பெயில் எடுத்தேன். ஒவ்வொருவரும் ஏழைகள். அவர்களை தூண்டி விட்டவர் வரவில்லை. கமல் என்னை திட்ட ஆள் ரெடி செய்து அனுப்பிவிட்டு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் உலக நாயகனால் உள்ளே போனார்கள். அந்த கேஸ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

தர்மம் செய்யுங்கள். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தம்பி இறந்து விட்டார் அவரின் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போயிருக்கிறார்கள். அதுதான் அவர் சேர்த்த சொத்து. அவர் அப்பா ஆதரவற்றவர்களுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்துள்ளார் ஆனால் இந்த தம்பி அதை தொடர்ந்து நடத்தியுள்ளார். அதுமட்டுமல்ல அந்த தம்பி தான் இல்லையென்றால் யார் நடத்துவார்கள் என  8 கோடி ரூபாய் பேங்கில் போட்டு வைத்து,  தான் இல்லாவிட்டாலும் இது தொடர்ந்து நடக்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார். அது தான் புண்ணியம். இங்கு யார் செய்கிறார்கள்" எனக் கூறியுள்ளார். 

 

 

Next Story

"அப்பா நான் உன்ன ஜெயிக்க வைப்பேன்"  - கவனம் ஈர்க்கும் அதர்வா பட க்ளிம்ப்ஸ்! 

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

adharva starring Trigger movie Glimpse video goes viral

 

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா ‘தள்ளி போகாதே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். 'தள்ளி போகாதே படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘ட்ரிக்கர்’ படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தில் தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்க, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரிக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “ஒரு தந்தையும் அவரது துப்பாக்கியையும் மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. நடிகர் அதர்வா அந்தத் துப்பாக்கியின் ட்ரிக்கரை இயக்குவாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. அதற்காகத்தான் இப்படத்திற்கு ட்ரிக்கர் என்று தலைப்பு வைத்தோம். இதைவிட வேறு தலைப்பு இப்படத்திற்கு பொருத்தமாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ, யூடியூப் தளத்தில் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.