Advertisment

நடிகை மீரா மிதுன் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

court postponed meera mithun case

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர் குறித்துஅவதூறாகப்பேசி சமூகவலைத்தளத்தில்வீடியோவெளியிட்டதாக நடிகை மீராமிதுனுக்குஎதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம்,கலகத்தைத்தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்துமீராமிதுன்மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இதனிடையே நடிகை மீராமிதுன்மற்றும் அவரது நண்பர் அபிஷேக் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக நடிகை மீராமிதுன்மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும்ஆஜராகச்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று(22.6.2022)நீதிமன்றத்தில் ஆஜரானஅவர்களிடம்குற்றப்பத்திரிகையைநீதிபதிபடித்துக்காட்டியதோடு, அதுதொடர்பாகக்கேள்வியும் எழுப்பியிருந்தார். இதற்கு தங்கள்மீதான குற்றச்சாட்டைமறுத்த நடிகை மீராமிதுன்மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் இது தொடர்பான விசாரணையைஎதிர்கொள்ளவதாககூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையைஅடுத்தமாதம்(ஜூலை) 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisment

meera mithun tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe