Advertisment

இயக்குநர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் !

court issues warrent director rk selvamani

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களைஇயக்கி முன்னணி இயக்குனராகவலம் வந்தவர்ஆர்.கே செல்வமணி, சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Advertisment

கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏஅருள்அன்பரசு ஆகியோர் பைனான்சியர் போத்ரா குறித்து சில கருத்துக்களைத்தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சினிமா பைனான்சியர் போத்ரா ஆர்.கே செல்வமணி மற்றும்முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசுஇருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீனில்வெளிவரக்கூடிய பிடிவாரண்டைபிறப்பித்து, வழக்கு விசாரணையை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

rk selvamani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe