Advertisment

'யானை' படத்திற்கு எதிரான வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

The court closed the case against the arun vijay movie 'yaanai'

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'யானை'. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் " படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும், படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு படத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 1 (இன்று) ஒத்திவைத்தனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="02de4c52-6e13-4cb1-aa41-e53d163b6169" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_30.jpg" />

Advertisment

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று படத்திற்கு எதிராகத் தொடுத்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விஸ்வநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் மனுதாரரிடம் தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். பின்பு தணிக்கை சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

arun vijay Yaanai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe