ரன்வீர் சிங் மீது தொடுத்த புகார் ; போலீஸார் அதிரடி நடவடிக்கை

Complaint against Ranveer Singh; Police takes action

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்பு ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். மேலும் இது தொடர்பாக அவர் மீது மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ரன்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து அவருக்கு சம்மன் கொடுக்க முடிவுசெய்தனர். அந்த சம்மனை கொடுக்க ரன்வீர் சிங் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதாகவும் அதனால் அவர் இங்கு இல்லை எனவும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பு அதிரடியாக தெரிவித்துள்ளது.

MUMBAI POLICE ranveer singh
இதையும் படியுங்கள்
Subscribe