Skip to main content

இவர் காமெடி நடிகர் மட்டுமில்லை...!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

‘ஹெலோ எக்ஸ்கியூஸ் மி, சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா?’ என்று வடிவேலுவிடம் தவசி படத்தில் வரும் காமெடியின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இதன்பின் பல படங்களில் காமெடியனாக நடித்து புகழடைந்தார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். குமுளியில் நடைபெற்ற சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி இன்று காலை அதிகாலை நான்கு மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.
 

krishnamoorthy


என்னதான் தவசி படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியின் மூலம் மக்களின் கவனத்தை இவர் ஈர்த்திருந்தாலும் அதற்கு முன்பாகவே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்பின் முகவரி கேட்க வரும் கதாபாத்திரம் இவருக்கென்று சினிமாவில் ஒரு முகவரியை கொடுத்துள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் புரொடக்‌ஷன் மேனேஜராக பணிபுரிந்திருக்கிறார். தீபாவளிக்கு ரிலீஸாக இருக்க கைதி படத்தில் கூட நடித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
 

sss


திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது நாட்டம் அதிகமாக இருந்ததால் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியில் போடப்படும் டிராமாக்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பின் பத்தாம் வகுப்பு பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு 17 வயதில் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். பல இடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு பின்னர் சினிமா கம்பேனிகளிலும், விளம்பர கம்பேனிகளிலும் புரொடக்‌ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். குழந்தை ஏசு என்னும் படத்தில் ஆபிஸ் பாயாக சேர்ந்து அந்த படம் முடிவதற்குள் இவரின் உழைப்பால் புரொடக்‌ஷன் மேனேஜராக உயர்ந்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஒரு பேட்டியில், “கிருஷ்ணமூர்த்தி என்னைவிட்டு போனப்பிறகு எனக்கு நிறைய லாஸ் ஆகிடுச்சு. அந்தளவிற்கு இவரைப்போல வேறு ஒரு மேனேஜர் எனக்கு கிடைக்கவில்லை” என்று பெருமிதமாக கூறினார்.
 

ssss


கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உள்ளிட்ட மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக பணிபுரிந்திருக்கிறார். வைகைப்புயல் வடிவேலும் இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கமல்ஹாசனின் தீவிர ரசிகன் இவர். நாவல் ஒன்றை வாங்கினால் முதலில், கடைசி பக்கத்தை படித்து க்ளைமாக்ஸ் என்ன என்பதை தெரிந்துகொண்டுதான் கதையையே படிக்க தொடங்குவார் என்று அவரே தன்னை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தவசி படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்தபோது வடிவேலுதான் கிருஷ்ணமூர்த்தி முகவரி கேட்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாராம். இவர் நடிக்கவே மாட்டேன் என்று வீட்டிலேயே இருந்திருக்கிறார். பின்னர் வடிவேலுவே கால் செய்து இந்த காட்சியில் நீதான் நடிக்கிற என்றவுடன் வேறு வழியில்லாமல் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த காட்சியில்தான் மக்களை ஈர்த்து காமெடியனாக வலம் வந்து பின்னர், மௌனகுரு, நான் கடவுள். நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக மாறியிருக்கிறார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

“ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன்...” - அனுபவம் பகிர்ந்த வடிவேலு 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vadivelu about maamanna in  ciff

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு. 

மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.  

ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.