Advertisment

முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து புதிய அவதாரம் எடுக்கும் ‘கோமாளி’ பட இயக்குநர்!

Pradeep Ranganathan

Advertisment

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் பிரதீப் ரங்கநாதன். ‘கோமாளி’ படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரம் உட்பட சில முன்னணி நடிகர்களிடம் பிரதீப் ரங்கநாதன் கதை கூறியபோதிலும், அவர் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இன்று (04.10.2021) வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடிக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஏ.ஜி.எஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக அறிமுகம் செய்வது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Pradeep Ranganathan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe