பிரபல துணை நடிகர் மாறன் கரோனாவால் மரணம்!

maran

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த பிரபல துணை நடிகர் மாறன் மரணமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்துவரும் மாறனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த இரு நாட்களாக சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (11.05.2021) நள்ளிரவு காலமானார். இவர், ‘கில்லி’, ‘குருவி’, ‘டிஷ்யூம்’ உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

corona
இதையும் படியுங்கள்
Subscribe