Advertisment

சாஹோ தோல்வி...தயக்கத்தில் ராஜமௌலியை அணூகும் சிரஞ்சீவி...

கைதி நம்பர் 150 படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சீரஞ்சீவி நடிக்கும் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

chiranjeevi with rajamouli

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கொனிடேலா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

பல மொழி நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் குவிந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் கனவு படமான இந்த படம் ஹிட் அடித்தே தீர வேண்டும் என்று ஒரு முடிவாக இருக்கிறாராம். படம் நல்லபடியாக எடுத்திருந்தாலும், படத்தின் நீளம் சிறிது தயக்கத்தை கொடுத்திருக்கிறதாம் இதனால் பிரியட் படங்களை எடுத்து கைதேர்ந்தவராரன ராஜமௌலிக்கு படத்தை போட்டு காட்டி அவரை வைத்து எடிட் செய்ய காத்திருக்கிறாராம் சிரஞ்சீவி.

முன்னதாக சாஹோ படம் ரிலீஸாகுவதற்கு முன்பு அந்த படத்தை பார்த்த ராஜமௌலி படத்தின் நீளம் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வரும் அதனால் ட்ரிம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனாலும் படக்குழு அப்படியே ரிலீஸ் செய்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் ராஜமௌலி சொல்லியதை செய்திருக்கலாம் என்று தற்போது யோசிக்கிறதாம் படக்குழு. இதை தெரிந்துதான் சிரஞ்சீவி ராஜமௌலியை அழைத்து எடிட் செய்ய தேதிகள் கேட்டிருக்கிறாராம்.

ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருப்பதால் எப்போது தேதிகள் தந்து எடிட் செய்ய செல்வார் என்று பலரும் காத்திருக்கிறார்களாம்.

chiranjeevi ss rajamouli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe