chiranjeevi

Advertisment

'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ். இவர் தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர் மேக்னா ராஜ். மேக்னா ராஜ், கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காலதித்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியாக சினிமாக்களில் நடித்து வந்தார் மேக்னா.

கடந்த ஜூன் 6ஆம் தேதி மேக்னாவின் கணவரான சிரஞ்சீவிக்கு திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவைக் காப்பாற்ற முடியவில்லை. நேற்று மதியம் சிரஞ்சீவி சர்ஜா காலமானார். இவருக்கு வயது 38தான் ஆகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் தான் சிரஞ்சீவி சர்ஜா என்பது நினைவுக் கூரத்தக்கது.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஷோபா தே, கன்னட நடிகர் சிரஞ்சீவி மறைந்ததைத் தவறாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி என நினைத்துக்கொண்டு அவரது புகைப்படத்தைப் பதிவிட்டு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அவரது ரசிகர்களும், தெலுங்கு பிரபலங்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தன்னுடைய போஸ்ட்டை நீக்கிவிட்டு, மன்னிப்புக் கோரியுள்ளார். ஆனாலும், இவர் செய்த ட்வீட்டின் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. இதனால் பலரும் ஷோபாவை கேலி செய்து வருகின்றனர்.