பிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பலர் எழுதிய இந்த தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.