Skip to main content

'டப்பிங் யூனியன் என்னை வைத்து நிறைய வருவாய் பார்த்தது' - சின்மயி பகிரங்க குற்றச்சாட்டு !

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
chinmayi

 

டப்பிங் யூனியன் சங்கம் தான் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் பாடகியும், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞருமான சின்மயி. இதையடுத்து டப்பிங் யூனியன் சங்கம் சின்மயியை அதிரடியாக நீக்கியது. இதைத்தொடர்ந்து சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்று டப்பிங் யூனியன் அறிவித்தது. இந்நிலையில் இந்த செய்தியை மேற்கோள்காட்டி சின்மயி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

அதில்... "தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் கொடுக்க வேண்டுமாம். 2006 ஆம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் பார்த்தது. ஆனால் நான் இப்போது என் வேலை உரிமைக்காக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டுமா? ஒன்று இரண்டு படங்களில் டப்பிங் பேசியவர்கள் கூட யூனியனில் ஆயுள் கால உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 12 ஆண்டுகளாக யூனியனில் இருக்கும் நான் புதிய உறுப்பினராக சேர வேண்டுமா? டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன். யூனியனில் உறுப்பினராக சங்க விதிப்படி 2,500 ரூபாய் கட்டினாலே போதும். அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் ஏன் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பு கடிதமும் என்று தெரியவில்லை" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இப்ப வேதாளம்.. நெக்ஸ்ட் தூக்கு துரை.. - அஜித்தை விடாத சிரஞ்சீவி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

chiranjeevi next is ajith viswasam movie remake

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

 

சமீபகாலமாக ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சிரஞ்சீவி விஜய் நடித்த 'கத்தி' படத்தை 'கைதி நம்பர் 150' என்ற தலைப்பிலும், மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' படத்தை 'காட்ஃபாதர்' என்ற தலைப்பிலும் தெலுங்கில் ரீமேக் செய்தார். அந்த வகையில், தற்போது அஜித்தின் 'வேதாளம்' பட ரீமேக்கை தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'விஸ்வாசம்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை 'கைதி நம்பர் 150' இயக்கிய வி.வி.விநாயக் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

Next Story

”மரியாதைக்காக செய்தால்கூட அதை அஜித் விரும்பமாட்டார்” - அஜித் குறித்து நெகிழ்ந்த வெள்ளப்பாண்டி

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

 Vellai Pandi

 

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, அஜித்துடனான விஸ்வாசம் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...  

 

”விஸ்வாசம் படத்தில் அஜித் சாருக்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் வாழ்க்கையில் சொந்த அப்பாவிடம்கூட நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் பாசக்கார பையன். தலைக்கணம் இல்லாத ஈவிரக்கம் கொண்ட மனிதர். அவங்க ஷாட் முடிந்த உடனே எல்லோரும் கேரவனுக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் நம் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் பக்கத்தில் வரும்பொழுது மரியாதைக்காக எழுந்து நின்றால்கூட, நீங்கள் அப்பா, நான் பையன், நீங்கள் போய் எழுந்து நிற்கலாமா என்பார். 

 

ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் கையாலே அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருந்தாலும் அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது”. இவ்வாறு வெள்ளப்பாண்டி தெரிவித்தார்.