Skip to main content

என்னை ஸ்வீட் ஹார்ட் என்று அழைத்தார் -யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் மீது சின்மயி குற்றச்சாட்டு

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
prashanth cinmayi


 

பிரபல பின்னணி பாடகி சின்மயி ட்விட்டரில் யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் குறித்து பரபரப்பான ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
 

யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் முன்பு ஒரு பிரச்சனையின்போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி, தன்னை ஸ்வீட் ஹார்ட் என அழைத்ததாகவும், ‘இனி என்னை அப்படி அழைக்காதீர்கள் என்று கூறிவிட்டு, அவரை பிளாக் செய்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார். இதை அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
 

இதைத்தொடர்ந்து ‘எனக்கும் பிரசாந்த் இப்படியான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதை நீங்கள் உங்களின் பக்கத்தில் பதிவிடவேண்டும். அப்போதுதான் அவரின் உண்மையான முகம் தெரியும் என்பெயரை வெளியிட வேண்டாம். என ஒரு பெண் சின்மயிக்கு மெசெஜ் அனுப்பியுள்ளார். சின்மயி அந்தப் பெண்ணின் பெயரை வெளியிடாமல் அவர்களது மெசெஜ்களை மட்டும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பலரும் பிரசாந்தை விமர்சித்து வருகின்றனர்.
 

இதுகுறித்து, பிரசாந்திடம் கேட்டபோது, இது உண்மையில்லை, அப்படி நான் கூறியது உண்மையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் பிரஷாந்த் திடீர் சந்திப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
prashanth meets thirumavalavan

பிரஷாந்த், தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும்  ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் படத்தை கைவசம் வைத்துள்ளார். நீண்ட காலமாக உருவாகி வரும் படம் விரைவில் வெளியிடவுள்ளதாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். 

சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அன்மையில் கூட நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

இந்த நிலையில், பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி-யை சந்தித்துள்ளார். 

Next Story

“அதுக்கு நிறைய தைரியம் வேண்டும்” - விஜய் குறித்து பிரசாந்த்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prashanth about vijay

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரசாந்த் கலந்து கொண்டார். அதில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அவர் பேசுகையில், “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பார்கள். என்னை பொறுத்தவரை அது உயிரைத் தாண்டி ஒரு குடும்பத்தை காக்கும் கவசம். இன்றைக்கு நடக்கும் நிறைய விபத்துகளில் உயிர் பலியாவது தலைக்கவசம் அணியாதது தான் காரணம் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதனால் மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி வருகிறேன். அதன் மூலம் ஒருத்தர் உயிர் காப்பாற்றப்பட்டாலும் எனக்கு பெருமைதான்” என்றார்.  

அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பேசிய அவர், “அந்தணன் படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் சாருடன் சேர்ந்து ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மூன்று புது ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதிலும் நடிக்க போறேன். விஜய்யுடன் நடிக்கும் படம் சூப்பரா போயிட்டு இருக்கு. உங்க எதிர்பார்ப்புக்கு மேல் அந்த படம் இருக்கும்” என்றார். 

மேலும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “விஜய்யை என்னுடைய சகோதரர் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி உண்மையிலே உழைப்பும், கடமைகளும் நிறைந்தது. அது விஜய் சார்கிட்ட இருக்கு. அதை நான் வாழ்த்துகிறேன்.  எனக்கு அது ரொம்ப கஷ்டம். அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். அவர் இறங்கியிருக்கிறார், வாழ்த்துகள்” என்றார்.