Advertisment

"என்றாவது ஒருநாள் அவரை சந்திப்பேன் என நம்பினேன்" - பாடகி சின்மயி வேதனை! 

fvdsg

இந்தியாவின் பழம்பெரும் பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் 1930-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் பிறந்தவர். பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜஸ்ராஜ், பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத பாடகராக திகழ்ந்தவர். 2000-ஆம் ஆண்டு இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. கரோனா ஊரடங்குக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் இன்று அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து, பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாடகி சின்மயி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்.."எத்தனை வருடங்கள் இந்த லட்சிய மனிதரின் பாடல்கள் கேட்டு, என்றாவது ஒருநாள் பண்டிட் ஜஸ்ராஜை ஒரு முறையாவது சந்திப்பேன் என்று நம்பினேன்... என் இதயம் நொறுங்கிவிட்டது" என கூறியுள்ளார்.

Advertisment

chinmayi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe