vagsdagbsd

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால்முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார். ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர், நடிகர் சேரன் கண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "எந்தப் பள்ளியாக இருந்தாலும் குழந்தைகளுக்குப் பெற்றோர் இடத்தில் நிற்க வேண்டிய ஆசிரியர்களின் இடத்தைக் கறைபடிய வைக்கும் ராஜகோபாலன் போன்ற நபர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காதவாறு அரசு முடிவு காண வேண்டும். தண்டனைகள் கடுமையாக்குவதே சிறந்த தீர்வு" எனக் கூறியுள்ளார்.