Advertisment

"காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது" - சேரன் உருக்கம்!

gegsdgsd

Advertisment

பிரபல பாடகர் கோமகனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று (06/05/2021) அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றபாடகர் கோமகனின் மறைவுக்கு திரையுலகினரும், அவரது ரசிகர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகிற நிலையில், இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்..."வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கும் கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்" என பதிவிட்டுள்ளார்.

cheran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe