இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை சவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ளள நிலையில் படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள்கோவிலில்சாமி தரிசனம் செய்யவந்தனர். அப்போது அங்கு வந்த சென்னை மேயர் பிரியா ராஜனைசந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப்புகைப்படம் தற்போதுசமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.