/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ar-rahman_3.jpg)
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்ததற்கு வாங்கிய சம்பளத்தில் ஏ.ஆர். ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செல்போன் நிறுவனத்திற்கு இசையமைத்ததற்கான சம்பளமான ரூ.3.47 கோடியை தனது அறக்கட்டளை பெயரில் பெற்றதாக இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)