Skip to main content

விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

chennai high court new judgment case actor vijay

 

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி செலுத்த தாமதம் ஆனதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் வெளிநாட்டு சொகுசு கார் தொடர்பான   வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

 

கடந்த  2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட bmw x5 காருக்கு நுழைவு வரி செலுத்த நடிகர் விஜய்க்கு தமிழக அரசின் வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நுழைவு வரி வசூலிக்க மாநில அதிகாரங்கள் இல்லை என்ற உத்தரவு பிறப்பித்து இருந்தது. காருக்கு 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்திற்கு 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. 2 சதவிகிதம்  வரி விதிப்பதற்குப் பதிலாக 400 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வணிகவரித்துறையின் வரிவிதிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

 

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று(11.7.2022) தீர்ப்பளித்திருக்கிறது. அதில் நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டுதான் சொகுசு காரை இறக்குமதி செய்திருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டுதான் மாநில அரசுக்கு நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளதாக  தீர்ப்பளித்திருந்தது. எனவே  2019 ஆண்டுக்கு முன்பு முழு வரியும் செலுத்தியிருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்கக்கூடாது. 2019 ஆண்டுக்கு பிறகு நுழைவு வரி செலுத்தவில்லை என்றால் அதற்கான அபராதத்தை மட்டும் தமிழக அரசு வசூலிக்கலாம் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.