கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு 400 சதவீதம் அளவிற்கு வணிகத்துறை அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விஜய், ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துஉள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு நடிகர் விஜய்க்குஎந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், விசாரணை முடியும் வரைஇவ்விவகாரம் தொடர்பாகஎந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனக் கூறியது.
இந்நிலையில்இன்று (1.2.2022)மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனைதொடர்ந்து நீதிபதி சரவணன் வழக்கை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.